Tuesday, November 24, 2009

முக்கி முக்கி எழுதிய முதற்பதிவு

நண்பர்களே !
வலைப்பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.புனைபெயரோடு என் சொற்கணைகளை இணையத்தினூக அணைகடக்க வைக்க வந்திருக்கும் நான்....

சுற்றிக் கொண்டிருக்கின்ற பூமியில் இருந்துகொண்டே சுத்திக் கொண்டிருக்கும் சனத்தை
சுத்தி சுத்தி பார்த்துக்கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் தான்....

என் பெயரைப் பார்த்து நான் கருணையானவன் என நீங்க நினைத்தால் அது என் தப்பு அல்ல.......

என் பதிவுகளைப் பார்த்து நான் கருணையற்றவன் என நீங்க நினைத்தால் அதுவும் என் தப்பு அல்ல.......

கருவிலிருந்தே கணைகளை கேட்டு கேட்டு வளர்ந்ததால் இவன் கருணையூரான் என என நீங்க நினைத்தால் அதுவும் என் தப்பு அல்ல.......

( கரு + கணை , இங்கே கணை என்று நான் சொல்லவருவது தமிழ்ச்சொற்கணைகள் )

அப்ப யாரு ? ? ? ? ?

நண்பர்களே!
எனக்கு தமிழ் என்ற கடலுக்குள் தத்தளித்து முக்குளித்து முத்தெடுத்து மாலை தொடுக்க தெரியாது தான்.......

ஆனாலும்..... ஏதோ......

தத்தளித்து முக்குளிக்கின்ற தமிழை தத்தெடுத்து வளர்த்து அதற்கு மாலை அணிய விரும்பும் தமிழர்களில் ஒருவன் தான் நானும்......

என் கண்மணிகளே !
என் கண் மணியின் உதவியோடு பாதுகாக்கப்பட்ட விம்பங்களின் பிரதிபலிப்பைக் கொண்ட என்
கன்னி முயற்சிதான் இது...... நண்பர்களே ! நீங்க
தண்ணி ஊத்தி வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை
கண்ணி வைத்து விடாதீர்கள் இந்த கருணையூரானுக்கு..........

ஒரே தடவையில் அடுத்தடுத்து என் சொற்கணைகளை பதிவுகளாக ஏவி உங்களை
நானும் கஷ்ரப்படுத்த விரும்பவில்லை ஏதோ என்னால் முடிந்தளவு வாரம் ஓரிரு பதிவுகளோடு விரைவில் சந்திப்போம்........
என் பதிவுகளின் வகைப்படுத்தல்கள்
"மின்னாத இடிகள்"
"முகவரியிடா மடல்கள்"
"உறங்காத இரவுகளில்...."
"......................................."
"......................................."

நான் இதை ஆரம்பித்தது என் ஆசையோ இல்லை பேராசையோ எனக்கும் புரியவில்லை...
ஏதோ என் பதிவுகள் உங்கள் இதயத்தை தொட்டுச்சென்றால் நீங்களும் விட்டுச்செல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை..........நலம் பெற வாழ்த்துக்களோடு நன்றிகளும் கூட.......