Tuesday, December 22, 2009

ஏழைக்குடிசை நோக்கி ஒரு அணி.......













வயற்கரை ஓரத்தினிலே
வரம்பு ஒரு கரையினிலே
வாடைக்காற்று புகுந்து விளையாடும்
வரிச்சு மட்டைக் கொட்டில் அது............


ஒரு கரையிலே நாலு சுள்ளி விறகுகள்
ஒரு கரையிலே நாலு குட்டி போட்ட ஆடு
ஒரு கரையிலே பாகற்கொடி படரும் படலை
ஒரு குடும்பம் நடுவிலே நாலு பிள்ளைகளோடு அது...........


மல்லாந்து படுத்திருக்கும் தந்தை
மல்லி சம்பல் அரைக்கும் மூத்த மகள்
மடியில் கடைக்குட்டியை தாலாட்டும் தாய்
மழை வெள்ளத்தில் கப்பல் விடும் மகன்கள் ..............


கார்மேகம் இடி இடிக்கும் நேரம் அது
வாய்க்கால் நீர் வழு வழுக்கும் நேரம் அது
ரோமங்கள் சிலிர் சிலிர்க்கும் நேரம் அது
குழந்தைகள் பசியால் துடி துடிக்கும் நேரம் அது...........


பச்சை உடுப்போடு பத்து பேர் சுத்தி வர
பனை உயரத்தில் அப்பாவி மூஞ்சை ஒருவன் முன்னால் வர
பக்கத்திலே இருவர் பறை அடித்து வர
பச்சை வயல் நடுவினிலேயே பசுமையான அணி அது..........


வயற்கரை கொக்கெல்லாம் மேலுந்து வட்டமிட
வந்தவர் அங்கெல்லாம் கூடியிருந்து திட்டமிட
ஒருவர் அதற்குள் மேலெழுந்து சட்டமிட
சதுப்பு தண்ணிக்குள்ளேயே நீந்துகிறது அன்னப்பறவை அது........


தூறல்கள் உடலை மெல்ல நனைக்க
அப்பா படலையை மெல்ல திறக்க
வந்தவர் மடலை மெல்ல கொடுக்க
அப்பாவும் ஏதோ சொல்ல நினைக்கும் நேரம் அது.........


கொச்சை தமிழில் "வணக்கம்" ஒன்று
பச்சை கடுதாசியில் கடிதம் ஒன்று
நெஞ்சை தொடுகின்றது கைகள் இரண்டும்
மூஞ்சை மூஞ்சைகள் மூஞ்சைகளோ ...வேணாம் அது......


அது வேணும்...ஓ...அதுவும் தாறம்
இது வேணும்...ஓ...இதுவும் தாறம்
உது தெரியும்...ஓ...உதுவும் தெரியும்
உப்படித்தான் போகணும்...ஓ..உப்படியே போங்க...அது.....


சதுப்பு தண்ணிக்குள் தத்தளித்த அன்னம் எங்கே ?
அட அதுக்குள்ளேயே ? காணலயே ?
மீண்டும் தரை இறங்குறது கொக்கு
புகை விட்டபடி பறக்கிறது அன்னம்..........


"அப்பா அன்னம் எங்கே" என்கிறான் மகன்
"அது திரும்ப வந்தாலும் வரும் வராமலும் போகலாம்"
"நீ உன்ர வேலையை பாரு"
"வெற்றிலை தட்டு எங்கே" என்கிறார் அப்பா .........


------------------------------------------------------------------------------------


இது அடுத்த பதிவு பற்றிய ஒரு தகவல்

நண்பர்களே !
வெள்ளவத்தையில் தற்கொலை செய்த ஒரு பெண்ணின் நாட்குறிப்பேடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அது தற்போது நக்கல் நடராசுவிடம்
அவரின் நக்கல் எழுத கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பதிவில் இருந்து அவற்றுள் முக்கியமானதை ஒரு தொடராக பதிவு செய்யவுள்ளேன் .....எதிர்பார்த்திருங்கள்....

6 comments:

ASFER said...

வாசித்தான் நண்பா

Unknown said...

sorry வாசித்தேன் நண்பா

கருணையூரான் said...

நன்றி அஸ்பர்

வடலியூரான் said...

கருணை அரசியலெல்லாம் தொட்டக் கலக்கிறிங்கள் கலக்குங்க

Sinthu said...

அரசியல் விளையாட்டு என்று புரிகிறது அண்ணா, ஆனால் சுத்தமாக புரியவே இல்ல...

கருணையூரான் said...

இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் புரியும்

Post a Comment