tag:blogger.com,1999:blog-29625069044229355132024-02-19T03:14:31.341-08:00கருணையூரான்கற்பனைகள் கருவாக்க......
ஒப்பனைகள் உருவாக்க.....
உங்களோடு நானும்.........கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-62204376097703102352010-08-07T20:42:00.000-07:002010-08-07T21:34:30.416-07:00வன்னியில் ஒரு மாணவியின் வாழ்க்கையில் ஒரு நாள்நண்பர்கள் அனைவருக்கும் மிக மிக நீண்ட நாட்களின் பின் கருணையூரானின் வணக்கங்கள் . இந்த பதிவு வன்னியில் மீளக்குடியமர்ந்து குடிசையில் வாழும் ஒரு உயர்தர மாணவியின் வாழ்க்கையில் ஒரு நாள் இடம்பெற்ற சம்பவங்களை உரையாடல் மூலமாக தந்துள்ளேன் . அவருடைய பெயர் மதி.அவர் குடிசையில் அம்மா , அண்ணாவுடன் இருக்கின்றார்.அண்ணா அங்கம் ஒன்றை இழந்து வீட்டில் சுயதொழில் செய்கின்றார்.மதி கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் உயர்தர கலைப்பிரிவில் கற்கின்றார். முக்கியமான விடயங்களை சுருக்கமாக தந்துள்ளேன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMARBROGhGqSl1XIDu22VzmsDTClNq73gMYJJNFVlrtP1K8VPFIzgNQh1h6MY7BZM7wOhcQGaDFvsY0ji47WXHiDJhyphenhyphen5MtYlPVEgaxMqzsVKXvP9b9EKqRmdcuT7mLLgJgdeqzmlRlJgs/s1600/2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMARBROGhGqSl1XIDu22VzmsDTClNq73gMYJJNFVlrtP1K8VPFIzgNQh1h6MY7BZM7wOhcQGaDFvsY0ji47WXHiDJhyphenhyphen5MtYlPVEgaxMqzsVKXvP9b9EKqRmdcuT7mLLgJgdeqzmlRlJgs/s200/2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5502889455106772930" /></a><br /><br /><br /><div>அதிகாலையில்.......</div><div><br /></div><div><div><br />அம்மா :- மதி! எழும்பு....விடிஞ்சிட்டு....பெட் சீட்டை விடு மடிச்சு வைக்க....ஆமிக்காரர் கிணத்தடிக்கு வர முன் போயிட்டு குளி.....<span class="Apple-style-span" style="color:#3333FF;"> (ஓகோ.....அப்ப ஊருக்கே ஒரு கிணறா இருக்கு)</span></div><div><br />மதி :- பொறன எழும்பிறன்.<br /><br />அம்மா :- குளிக்கேக்க அந்த ரண்டு பயித்தம் கொடிக்கும் தண்ணி ஊத்தி விடு......</div><div><br /></div><div><br />மதி எழுந்து பல் விளக்க போகின்றாள்</div><div><br /><br /></div><div>மதி:- அம்மா பற்பொடி முடிஞ்சுதா ?</div><div><br />அம்மா :- ஓ ..அந்த கல்லில கரிக்கட்டி வைச்சனான் எடுத்து விளக்கு இல்லாட்டி அண்ணா வேப்பம்தடி முறிக்கிறான் ...வாங்கு...<span class="Apple-style-span" style="color:#3366FF;"> ( ம்..இப்படியும் இருக்கு சனம்)</span></div><div><br />மதி:- அம்மா ! என்ர வலது கால் செருப்பை காணல</div><div><br />அம்மா:- பிறகு வந்து தேடிப்பார் ..இப்ப அண்ணாக்கு வாங்கின செருப்பின்ர வலது கால் சும்மாதானே இருக்கு எடுத்து போடு....<span class="Apple-style-span" style="color:#3366FF;"> ( ஓகோ ....காலியானது காலா </span><span class="Apple-style-span" style="color: rgb(51, 102, 255); ">)</span></div><div><br /></div><div>மதி:- இண்டைக்கு அக்காவை பாக்க போறியா ? <span class="Apple-style-span" style="color:#3366FF;">( இது வேறையா ?)</span></div><div><br />அம்மா:- ஓ போறன் ...நான் கறி வைச்சிட்டு போறன் ..நீ வந்து அரிசியை போட்டு இறக்கு...</div><div><br />மதி:- ஐயோ ! எனக்கு கல்லரிக்க தெரியாது. நீங்க போட்டுட்டு போங்க <span class="Apple-style-span" style="color:#3366FF;">(கல்லோட அரிசி ...ம் ...புரியுது யார் தந்தது எண்டு)</span></div><div><br />அம்மா:- நீ அந்த அரிசியை விட்டுட்டு பெரியம்மா கொண்டுவந்த அரிசில ஒண்டரை சுண்டு போடு<br /><br /><br />அவ்வாறே மதி புத்தக பையை எடுத்துகொண்டு வீட்டுக்கு முன்னால் பஸ்ஸுக்காக காத்திருக்கின்றாள் .அருகில் பரண் கட்டி காவல்புரியும் ஆமிக்காரன் <span class="Apple-style-span" style="color:#3366FF;">( என்ன மதி வீட்டுக்கு காவலா ?)</span> மதியோடு கதை தொடுக்கின்றான்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih6_DU2qlv8QMqb-f8xSgCJi5_yOzTbyIUoe62jhD929i1iWqzie8rPzpZXjkVRg9GbeernKrHgjCyGavSiiDhNEdpdoypCTo4YFPSNBOXNuUaNmi3Qq0hw6ozDcF1kctMVPIH_TPvIAU/s1600/1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 147px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih6_DU2qlv8QMqb-f8xSgCJi5_yOzTbyIUoe62jhD929i1iWqzie8rPzpZXjkVRg9GbeernKrHgjCyGavSiiDhNEdpdoypCTo4YFPSNBOXNuUaNmi3Qq0hw6ozDcF1kctMVPIH_TPvIAU/s200/1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5502886808336493890" /></a><br /><br /><br /></div><div>ஆமி :- தங்கச்சி ஸ்கூல் போறது.நல்லா படிக்கிறது . சரியா ......என்ன தங்கச்சி இப்ப குளிக்க வாறது இல்ல ...குளிக்கிறது இல்ல தானே ...<span class="Apple-style-span" style="color:#3366FF;">.( என்ன ஒரு அக்கறை )</span><br /><br />மதி:- நான் இப்ப இரவு தான் குளிக்கிறனான்<span class="Apple-style-span" style="color: rgb(51, 102, 255); ">( குழந்தை மனசு போல )</span> </div><div><br /></div><div>ஆமி :- தங்கச்சி உங்க செருப்பு , உடுப்பு நாய் கொண்டுவந்து போட்டிருக்கிறது. நாங்க அதை உள்ளே எடுத்து வைச்சிருக்கிறது. வந்து எடுக்கிறது இப்ப ....என்ன யோசிக்கிறது ..பயம் வேண்டாம் ..நாங்க பிடிச்சு கொண்டு போறதில்ல.<span class="Apple-style-span" style="color:#3366FF;"> ( பிடிச்சு கொண்டு போகமாட்டிங்க ..பிடிச்சு பிடிச்சு விடுவிங்க தானே )</span><br /><br />மதி:- பஸ் வருது . போகும் போது வாறன் .</div><div><br /><br />வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி நெரிசலாக வந்த பஸ்ஸில் ஏறி நுழைகின்றாள் மதி. அப்போது திடீரென்று ஒரு பெண்ணின் காரசாரமான சத்தம்........</div><div><br /><br />பெண் :- என்ன பிள்ளை ! காலை மிரிக்கிறாய்..கால் ல பிளேட் வெட்டி புண் எண்டு மருந்து கட்டி இருக்கிற தெரியலயா..பஸ்ஸில போனதில்லையா ..பழக்கவழக்கம் தெரியாதா ?எங்கை இருந்து வருதுகளோ .... <span class="Apple-style-span" style="color:#3366FF;">( ஓ அம்மா ! புரியுது நீங்க யாழ்ப்பாணம் தான் போறிங்க எண்டு ...கவனம் காயம் ..மருந்து போடுங்க வடிவா )</span><br /><br /><br /></div><div>பயத்துடன் சத்தம் போடாமல் ஒதுங்கி நிக்கின்றாள் மதி.. அந்த பெண்ணோ ...<br />கையில் தொலைபேசி ...நெற்றியில் சிவத்த ஒட்டுப்பொட்டு ...அழகாக தலை வாரி விரித்துவிடப்பட்டிருந்தது. <span class="Apple-style-span" style="color:#3366FF;">( ம்.... உன்னை சொல்லி குற்றம் இல்லை ..)<br /></span><br /><br /></div><div>மதி பஸ் நடத்துனரிடம் காசை கொடுக்கின்றாள் .</div><div><br /><br /></div><div>நடத்துனர் :- சில்லறை இல்லை தங்கச்சி ..மிச்சம் பிறகு கேளுங்க .<span class="Apple-style-span" style="color:#3366FF;">( அட பாவிங்களா இவங்களோடையும் இப்படியா ....கிடைச்ச மாதிரிதான்)</span><br /><br /><br /></div><div>அவ்வாறே மதி கிளிநொச்சியில் பஸ்ஸில் இருந்து இறங்கி பாடசாலை நோக்கி அண்மிக்கின்றாள் . அப்போது வீதியில் சற்று வாகன நெரிசல். வீதிக் கரையில் இராணுவ வீரர்கள் குழுமி நிக்க பெரியவன் ஏதோ நட்டுக்கொண்டிருந்தார் . வேடிக்கை பாத்துக்கொன்டிருந்த மாணவர்களுடன் மதி இணைந்தாள் . </div><div><br /></div><div><br /></div><div>ஆம் ....அது மர நடுகை விழாவாம் . அங்கே அரச மரம் நடப்பட்டு கூடு கட்டப்படுகிறது.<span class="Apple-style-span" style="color:#3366FF;">( அரோகரா ...முறிகண்டி பிள்ளையாருக்கு அரோகரா)</span> அவ்வாறே பெரியவன் மாணவர்களிற்கு ஏதோ சாப்பிட கொடுத்தவாறே..........<br /><br /><br />ஆமிப்பெரியவன் :- தம்பி தங்கச்சி மாரே இதை தண்ணி ஊத்தி நீங்க தான் வளர்க்க வேண்டும் . பெரிசா வந்தா நல்லம் தானே .நிழல் தரும் .விளையாடலாம் . இளைப்பாறிப் போகலாம். <span class="Apple-style-span" style="color:#3366FF;">( புத்த பகவான் பாதையால வந்தா அப்படியா ஒரேயடியா இளைப்பாறிடுவர்)</span></div><div><span class="Apple-style-span" style="color:#3366FF;"><br /></span><br />அவ்வாறே பாடசாலையினுள் நுழைகின்றாள்.தன்னுடைய வகுப்பறையினுள் சென்று இருக்கின்றாள் . </div><div><br />வகுப்பறையோ..........</div><div><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyZijAzo9opzN987ZBx83XBrEd7pT13PV0lwUWjzA86aUnwSa65fnfDuLldb1SfUOxZ2b1CgZ4GfW0YUvCuzMM_gGBO_xdhQ7ajCGg8phpp0VLJVbDiCbwLO8s0T6SpoBKfHucMxGjOGs/s1600/3.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 139px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyZijAzo9opzN987ZBx83XBrEd7pT13PV0lwUWjzA86aUnwSa65fnfDuLldb1SfUOxZ2b1CgZ4GfW0YUvCuzMM_gGBO_xdhQ7ajCGg8phpp0VLJVbDiCbwLO8s0T6SpoBKfHucMxGjOGs/s200/3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5502889037279732642" /></a><br /><br /></div><div> ஓட்டைகள் உள்ள நான்கு சுவர்கள் ....கதவு இல்லை நிலை இருக்கு....சீட் இருக்கு ஆனால் சிலாகை இல்லை......சுவர்களில் " பண்டார " , " சுனில்" , "தம்மித" என ஆங்கில , சிங்களங்களில் எழுதப்பட்டிருந்தது . மேசையிலும் ஏதோ எழுதப்பட்டிருந்தது ஆனால் தெளிவற்று இருந்தது . அதாவது<br />"புலி தாக தம தா " என இருந்தது . <span class="Apple-style-span" style="color:#3366FF;">( நான் நினைக்கிறன் " புலிக்கு தாகம் என்றால் தடாகத்துக்குள் தாவும் " என இருக்கலாம்)</span><br /><br /><br />ஆசிரியர் வகுப்புக்கு வருகின்றார்.இவர் கல்வியற் கல்லூரியில் ஆரம்ப பிரிவில் கற்று அண்மையில் ஆசிரியராக நியமிக்க பட்டவர். தினமும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து போபவர்<span class="Apple-style-span" style="color:#3366FF;">( பாவம் மனுசன் ..என்ன அக்கறை ..அங்கை இருந்து வருது) . </span>இங்கே உயர்தரத்துக்கு லொயிக் படிப்பிக்க விடப்பட்டுள்ளது,.வழ்மைபோல் பெறாமகளின் 10 நோட்ஸ் கொப்பிகளுடன் வருகின்றார் .<span class="Apple-style-span" style="color:#3366FF;">( என்ன படிப்பிக்கவோ ? இல்லை படிக்க வாறாரோ? )</span></div><div><br />சேர்:- சரி நாங்க இண்டைக்கு மிச்சத்தை பாப்பம் . ....இப்ப உதாரணம் சொன்னால் ..." பால் வெள்ளை நிறமானது ஆனால் வெள்ளை நிறம் எல்லாம் பால் இல்லை " ...என்ன மதி விளங்குது தானே ? நீ ஒரு உதாரணம் சொல்லு பாப்பம் ...<br /><br />மதி :- உதாரணமா ...... " செல் எல்லாம் விழுந்து வெடிக்கும் போது டும் சத்தம் கேக்கும் ஆனால் டும் சத்தம் வரும் போது வெடிப்பது எல்லாம் செல் இல்லை " சரியா சேர் ? <span class="Apple-style-span" style="color:#3366FF;">( பிள்ளை இன்னும் மறக்கலயா ...எப்படி மறக்கிற என்ன ) </span><br /><br />சேர்:- ம் ( தலை ஆட்டுகின்றார்) <span class="Apple-style-span" style="color:#3366FF;">( ஆட்டத்தான் தெரியும் ) </span></div><div><br />மதி :- சேர் ! லொயிக் பேப்பரில எத்தனை கேள்வி செய்யணும்<br /><br />சேர் :- ஏன் அவசரப்படுகின்றாய் ..பேப்பரில பாத்திட்டு சொல்லுறன் . சரி பிள்ளைகள் நான் தூரம் போகணும் மிச்சத்தை பிறகு பாப்பம்.( என்ன சேர் நீங்க அப்ப A/L யும் லொயிக் படிக்கலயா ? <span class="Apple-style-span" style="color:#3366FF;">முறிகண்டியானே இது எங்கை போய் முடியபோகுதோ)</span><br /><br />மதி :- ஏன் சேர் ...நீங்க கிட்ட வந்து இருக்கலாம் தானே ...<br /><br />சேர் :- சீ..சீ... கஷ்ரம் ..இங்க வசதிகள் காணாது . நல்ல தண்ணியும் இல்லை . A9 றோட் தூசும் ஒத்து வராது.<span class="Apple-style-span" style="color:#3366FF;">( கஷ்ர பிரதேச படி எண்டு தந்தால் பல்லை இழிச்சு கொண்டு வாங்குவம் என்ன சேர்)</span><br /><br /><br />அன்றைய பாடசாலையை முடித்துவிட்டு பஸ் எடுத்து வீட்டு வாசலில் இறங்குகின்றாள். அவளின் செருப்பு , உடுப்பு ஆமிட்டை இருப்பது ஞாபகம் வருகிறது. ஆமியும் கணக்காக</div><div><br /><br />ஆமி :- தங்கச்சி உள்ளே வந்து எடுக்கிறது . </div><div><br />மதி :- நீங்க எடுத்து தாங்க </div><div><br />ஆமி :- பயம் வேண்டாம் ...நான் மேலே நிக்கிறது தானே ..நீங்க போய் எடுக்கிறது .<span class="Apple-style-span" style="color:#3366FF;">(அதுதானே ....)<br /></span><br />உள்ளே நுழைந்த அவளை சாப்பிட்டுக் கொண்டிருந்த இன்னொரு ஆமி வரவேற்றான்.<span class="Apple-style-span" style="color:#3366FF;">( இது அவளுக்கு தெரியாம போயிட்டுதே )</span><br /><br />சிறிது நேரத்தின் பின் ஏதோ பேய் பிடித்த போல் செருப்பு , உடுப்புடன் குடிசைக்குள் நுழைகின்றாள் . <span class="Apple-style-span" style="color:#3366FF;">( பேய் பிடிச்ச போலவா ? ஏனாக இருக்கும் ? )</span><br /><br />ஏதோ வேலை செய்துகொண்டிருந்த அண்ணன் அவளை பார்த்து ...</div><div><br />அண்ணா :- என்னடி ! சட்டை எல்லாம் மஞ்சள் , சிவத்த கறை பிரண்டு இருக்கு ? <span class="Apple-style-span" style="color:#3366FF;">(யோசிக்க வேண்டிய விசயம்)</span><br /><br />மதி :- அது இண்டைக்கு பள்ளிகூடத்தில ஆமி சாப்பாடு தந்தவங்க.அதில மஞ்சள் பருப்பும் பீற்றூட்டும் சாப்பிட்டன் அதான் கறை வந்திட்டுது போல........<span class="Apple-style-span" style="color:#3366FF;">(ஓகோ ! இங்கயும் இதான் சாப்பாடோ ? )</span>.... ஏதோ.....அவள் அடுப்பை மூட்டி உலை வைக்கின்றாள்.....................<br /><br /><span class="Apple-style-span" style="color:#FF0000;">இது தொடருமா ?</span><br /><br />என்னடா இவன் கதை எழுதிட்டு எங்களை கேக்கிறான் எண்டு யோசிக்கிறிங்களா?</div><div><br /></div><div>நன்றாக வாசியுங்க ......</div><div><br /></div><div>மீண்டும் கேக்கிறன்<br /><br /><span class="Apple-style-span" style="color:#FF0000;">இது தொடருமா ? </span><br /><br />நண்பர்களே இவை யாவும் கற்பனையே ...ஆனால் சில உண்மை விசயங்களுக்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது.........பொறுமையாக முடிவுவரை வாசித்ததுக்கு நன்றிகள்..........<br /></div></div>கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-80319985587571610512010-05-19T00:19:00.000-07:002010-05-19T00:39:23.496-07:00தலைப்பு..........வெற்றிடம்..........<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgup_QUCLkdi4jbXhui5W6MAhpNSQ3T8tYa0HiPgGiZTh6znVNhQY0VJ3c1InVHuir5lgf70VGF8xVKWyIvXP6Yf-KlDv6wCWXk5gycFdzrEukecDDJGKQL1EzWjKIPua2FRSMgG34ydM/s1600/darkness-725288.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgup_QUCLkdi4jbXhui5W6MAhpNSQ3T8tYa0HiPgGiZTh6znVNhQY0VJ3c1InVHuir5lgf70VGF8xVKWyIvXP6Yf-KlDv6wCWXk5gycFdzrEukecDDJGKQL1EzWjKIPua2FRSMgG34ydM/s200/darkness-725288.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472879056333535986" border="0" /></a><br />கலையாத கனவோடு கரையேறிப்போனவர்களே<br />உறையாத உணர்வோடு உறைந்துபோனவர்களே<br />வலிக்காத வலியோடு வடிந்துபோனவர்களே<br />வாழாத வாழ்க்கையோடு வாடிப்போனவர்களே............<br /><br /><br />சத்தமில்லா நீயும் சடுதியாய் வளர்ந்து<br />உத்தமனாய் உரிமையை கேட்டிருந்தாய்<br />இரத்தம் தான் முடிவென்று ரதம் ஏறிவந்து<br />மொத்தமாய் இன்று முழுவதையும் இழந்துவிட்டாய்.......<br /><br /><br />ஆண்டாண்டு ஓடிச்சென்றாலும்<br />மாண்டுபோன உன் வரலாறு அழிந்து போனாலும்<br />மீண்டுவந்து நீ வரலாறு சொல்லாவிட்டாலும்<br />குண்டு பட்ட எம் உறவுகள் உன் நினைவை மீட்கும்........<br /><br /><br />உனக்காக நான் என்ன செய்தேன்<br />உனக்காக நான் என்ன தந்தேன்<br />உனக்காக நான் எதை இழந்தேன்<br />என் மனச்சாட்சி கேட்கும் வினாக்களிற்கு<br />நான் சொல்லும் பதில் ஒரு துளி பேனா மை மட்டுமே........<br /><br /><br />அழிந்துபோன உறவுக்காக அலைஅலையா போகவில்லை<br />மடிந்துபோன உறவை மடியில் வைத்து தாலாட்டவில்லை<br />உடைந்து போன உறவுகளோடு உருகிஅழவில்லை<br /><br />எப்படி சொல்ல என்னை.......<br /><br />சுகபோகத்தை அநுபவிக்க பிறந்த சுயநல தமிழன் என்றா?<br /><br />இல்லை<br /><br />பட்டம் பதவிக்கு ஆசைப்பட்ட பரதேசி தமிழன் என்றா ?<br /><br /><br /><br />மறந்து விடுகிறேன் வாழ்ந்த என் வாழ்க்கையை.........<br /><br />மன்னித்துவிடு என்னை ........<br /><br />தமிழனுக்காக வாழ்ந்து தமிழை கொல்லும் தமிழனாக இல்லாமல்<br /><br />தமிழனுக்காகவும் வாழாமல் தமிழையும் கொல்லும் தமிழனாகவும் இல்லாமல்<br /><br />தமிழனுக்காக வாழாமல் தமிழுக்காக வாழ்ந்த ஒரு தமிழனாக உன்னை சேரும் வரை......................கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-51273424452274662682010-02-24T23:17:00.000-08:002010-02-25T00:36:40.481-08:00கலங்(க்)கிய காலங்கள்............<span style="font-family:verdana;"></span><span style="font-family:verdana;">நண்பர்கள் அனைவரையும் இன்னொரு பதிவினூடாக சந்திப்பதையிட்டு மகிழ்ச்சி . இந்த பதிவினூ</span>டாக நான் "வதன நூல்" (Facebook) இல் ஒரு காலம்<br />( ஐப்பசி 2007 - வைகாசி 2009) போட்ட என் உள்ளத்து உணர்வுகள் சிலவற்றை இந்த பதிவினூடாக தருகின்றேன். உங்கள் பொன்னான நேரத்தை என் இந்த சிறிய பதிவிலே செலவிட்டமைக்கு ஆரம்பத்திலே நன்றியை சொல்லிவிடுறேன். நன்றி சொல்லிடானே என்று மூடாமல் கீழ இழுங்கோ.....<br /><br />இவை அக்காலத்திற்கு ஏற்றவாறு எழுதப்பட்டது . இக்காலத்தோடு ஒப்பிட்டு பாக்காதீங்க.தப்பாக இருந்தால் மன்னித்துவிடுங்க் பதிவுலகத்தில் தவழ்ந்துகொண்டிருக்கும் இக் கருணைக் குழந்தையை.......<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ_DcLbkmcwUtR08zWHhNUIL7UK2GWBr2VzjfFDWUPLHDnlfo9cI9eFjFZLxZpsCI5tlOvymFRC-vYWPrhMSg9zTToJ0L2IM9ORYfomfj2lO2r-6HYoHVrDUyyyj_VUcEBvDYNUG7EAcc/s1600-h/facebook.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 75px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ_DcLbkmcwUtR08zWHhNUIL7UK2GWBr2VzjfFDWUPLHDnlfo9cI9eFjFZLxZpsCI5tlOvymFRC-vYWPrhMSg9zTToJ0L2IM9ORYfomfj2lO2r-6HYoHVrDUyyyj_VUcEBvDYNUG7EAcc/s200/facebook.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5442087864602744274" border="0" /></a><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">1)<br />உன் கோலங்கள் மாறினாலும் கொள்கைகள் மாறினாலும் காலன் வரும் வரை காலம் உன்னை காப்பாற்றும்........</span><br /><br />வாயால் மட்டும் வெட்டி விளாசும் ஒரு நண்பனுக்காக எழுதப்பட்டது<br /><br /><span style="color: rgb(102, 102, 204);">2)<br />நான் ஒரு கோழை உன் வாய் முன்னாடி........<br />ஆனால் </span><br /><span style="color: rgb(102, 102, 204);">உன்னைப்போல் கோழை இல்லை நாய் முன்னாடி......... </span><br /><span style="color: rgb(102, 102, 204);">நான் வீரன் என் தாய் முன்னாடி .........<br />ஆனால் </span><br /><span style="color: rgb(102, 102, 204);">உன்னைப்போல் வீரன் இல்லை பொய் முன்னாடி ......</span>...<br /><span style="font-family:verdana;"><br /><br /></span><span style="color: rgb(102, 102, 204);">3)<br />கருணையும் நிதியும் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் இன்று புரிந்துகொண்டேன் உன்னிடம் இருப்பது கருணையல்ல நிதி மட்டுமே என்று.......<span style="color: rgb(255, 0, 0);">(புரியுது தானே யாருக்கு எண்டு)</span></span><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">4)<br />ஏய் ! 2008 போறியா நீ ? உனக்கென்று தந்தனுப்ப எனக்கென்று எதுவுமில்லை...</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> உன் தங்கை 2009 இடம் கொடுத்துவிடுகிறேன் எனக்கு விடிவு கிடைத்தால்.......</span><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">5)<br />+ , * எதுவும் இன்றி - இடமேயின்றி வாடும் உறவுகளை / துடிக்காதே ........<br /><span style="color: rgb(255, 0, 0);">(விளங்காட்டி வெக்கப்படாம கேளுங்கோ)</span></span><br /><br /><br />இது "என்னுடைய சந்தேகம்" என்ற தலைப்பில் எழுதப்பட்டது<br /><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">6)<br />பேய் கூட இப்போ அதிகமாக அலைகின்றது</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> அரைகுறையாக செல்லும் ஆத்மாக்களாலோ.............</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">நாய் கூட இப்போ நன்றியற்றதாக மாறுகின்றது</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> மனிதனோடு சேர்ந்து வாழ்வதனாலோ................<br /><br /><br /></span><div><span style="color: rgb(102, 102, 204);">காய் கூட இப்போ வெம்பி விழுகின்றது</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> அதுவும் தன் இனப்பெருக்கத்தை வெறுப்பனாலோ..............</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">பாய் (தாயின்) கூட இப்போ அதிகமாக ஈரமாகிறது</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> பசியால் அழும் குழந்தையின் கண்ணீராலோ..............</span><br /><span style="color: rgb(102, 102, 204);"><br /><br />தாய் கூட இப்போ தாலாட்ட மறக்கிறாள்</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> வடக்கில் வானிலிருந்து மழையாகப் பொழிவதனாலோ........</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">வாய் கூட இப்போ மூட மறுக்கின்றது</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> உயிர் எப்போதும் தன்னூடக போகலாம் என்று நினைக்கின்றதோ.......</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">பொய் கூட இப்போ உண்மையை சுடுகின்றது</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> இங்கே பொய் தான் வெல்லும் என்று அதற்கும் தெரிந்துவிட்டதோ...........</span><wbr style="color: rgb(102, 102, 204);"><span style="color: rgb(102, 102, 204);" class="word_break"></span><span style="color: rgb(102, 102, 204);">...</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">சேய் கூட இப்போ பால் குடிக்க மறுக்கின்றது</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> இரத்தவாடை பாலில் இருந்து வருகின்றது என நினைக்கின்றதோ......</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">நோய் கூட இப்போ அதிகமாக வருகின்றது</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> அதற்கும் இங்கே மருந்து இல்லை என்று தெரிந்து விட்டதோ.....</span><br /><br /><br /><br />இது "எப்போது" என்ற தலைப்பில் எழுதப்பட்டது<br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">7)<br />பச்சோந்தி தமிழன் இருக்கும் போது. . . </span><br /><span style="color: rgb(102, 102, 204);"> பசுமை வருவது எப்போது?</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">பொறாமைத்தமிழன் இருக்கும் போது. . .</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> பொற்காலம் வருவது எப்போது?</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">சுயநலம் பிடித்த தமிழன் இருக்கும் போது. . .</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> சுதந்திரம் வருவது எப்போது?</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">தமிழையே அழிக்கும் தமிழன் இருக்கும் போது. . .</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> தமிழர்க்கு தனிநாடு வருவது எப்போது?</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">பிரதேசவாதம் பேசும் தமிழன் இருக்கும் போது. . .</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> பிரிவு இல்லாமல் வாழ்வது எப்போது?</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">மனச்சாட்சி இல்லாத தமிழன் இருக்கும் போது. . .</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> மனம் திறந்து பேசுவது எப்போது?</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">எப்போது எப்போது என கேட்க வேண்டி இருக்கு. . .</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> எவனோ ஒருவன் அப்போது விட்ட தவறினால். . . .</span><br /><br /><br /><br /><br />இவை என் வாழ்க்கையை பிரதிபலிப்பவை ஆனால் எவ்வளவு தூரம் உண்மை என்று கேக்காதீங்க என்ன ...<br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">8)<br />கடவுளே ! விதியை எழுதும்போது கிறுக்கிய அதை வெல்ல மதியை வைக்கும்போது சறுக்கிய நீயும் என் வாழ்க்கையில் ஒரு பொறுக்கிதான்......</span><br /><br /><br />இது "என்னைப்பற்றி" என்ற தலைப்பில் எழுதப்பட்டது<br /><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">9)<br />பிறக்கும் போதே சாவின் விளிம்பு வரை சென்றவன் நான்.....</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> அதனாலோ ?....சாவை கண்டு பயப்படாதவனும் நான்.</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">கடவுள் எனக்கு தந்தது போதும் என நினைப்பவன் நான்...</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> அதனாலோ ?... கடவுளிடம் அதிகம் செல்லாதவன் நான்.</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">அனைவருக்கும் மனச்சாட்சி இருக்கு என நடப்பவன் நான்....</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> ஆனால் !...அனைவரிடமும் மனச்சாட்சி இருக்கு என நிருபிக்காதவனும் நான்.</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">தமிழை மிக மிக விரும்புபவன் நான்...</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> ஆனால் !...தமிழரை மிகவும் வெறுப்பவன் நான்.</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">என் குல தொழிலை வெறுத்தவன் நான்...</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> ஆனாலும்... என்னால் முடிந்தவரை என் குலத்தை பின்பற்றுபவன் நான்.</span><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">அமைதியனா வாழ்க்கையை விரும்புபவன் நான்...</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> அதனாலோ ?...அதிகம் அலட்டிக்கொள்ளாதவன் நான்.. </span><br /><br /><br /><br /><span style="color: rgb(102, 102, 204);">நான் நான் என்று அதிகமாக பாவித்துவிட்டேனோ நான்....</span><br /><span style="color: rgb(102, 102, 204);"> ...எனக்கும் நான் என்ற ஆணவம் இருப்பதனால் போல ?</span><br /><br /><br />மீண்டும் ஒரு பதிவு போட்டு உங்களுக்கு தொல்லை கொடுப்பேன். நன்றிகள்<br /><br /><br /><br /></div>கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-20385554133929491162010-02-10T22:16:00.000-08:002010-02-12T00:26:45.607-08:00அரசியல் வாதிகளின் காதலர்தின செய்தி ( கற்பனை )நண்பர்களே மீண்டும் ஒரு வித்தியாசமான பதிவோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.காதலர் தின சிறப்பு பதிவாக என்ன போடலாம் என்று யோசித்த போது உதித்த என் கற்பனைதான் இது. காதலர் தினத்தில் எங்கள் அரசியல்வாதிகள் சிலர் காதலர் தினத்தை பற்றி உரையாற்றினால் அல்லது வாழ்த்துச்செய்தி அனுப்பினால் அது எவ்வாறு இருக்கும் என்பதை சுருக்கமாக தந்துள்ளேன் . அரசியல் காரணங்களிற்காக எழுதவில்லை . படித்துப் பாருங்கள் . தப்பிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinqxpZ4qc-AQcLN80fe0cHUEvBxhB7W8aHBVIUV88K_Y-qn3OzhL5Tb2mXLAMHcdtDxgCRbb2E9q68EbOvgWLe0UqnD8Q3wNcW8eCRF0Kb7lm6oJbxC85fs4rdMMle-nmUV0gleLW8J2c/s1600-h/1.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinqxpZ4qc-AQcLN80fe0cHUEvBxhB7W8aHBVIUV88K_Y-qn3OzhL5Tb2mXLAMHcdtDxgCRbb2E9q68EbOvgWLe0UqnD8Q3wNcW8eCRF0Kb7lm6oJbxC85fs4rdMMle-nmUV0gleLW8J2c/s200/1.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5436866688286575970" border="0" /></a><br /><br /><br /><span style="font-weight: bold;">மதிப்புக்குரிய சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வின் காதலர் தின வாழ்த்துச்செய்தி</span><br /><br /><br />கணவன் மனைவி ஆகப்போகும் நாட்டின் செல்வங்களே ! <span style="color: rgb(0, 0, 153);">( என்ன ! ஆகப் போகுமா ? )</span> வருங்கால நாட்டைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறைக் காதலர்களே ! அனைவருக்கும் சாந்தி சமாதானம் நிறைந்த சுபீட்சமான நாளாக இந்த காதலர் தினம் அமைய வாழ்த்துக்கள். <span style="color: rgb(0, 0, 153);">( வழமையான விசயம்)</span><br /><br />முப்பது வருட தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று முதல் காதலர்தினம். <span style="color: rgb(0, 0, 153);">( ஆமால்லே )</span> அனைத்து காதலர்களும் இன்று பயம் , பதற்றம் இன்றி காதலர் தினத்தை கொண்டாடலாம். எங்கும் சுதந்திரமாக சுற்றி திரியலாம். காலி முகத்திடலுக்கு போகலாம் . கடற்கரைகுப் போகலாம் .படம் பார்க்க போகலாம் . பூங்காக்கு போகலாம். இன்று நீங்கள் சுதந்திர பறவைகள். குதூகலாமாக கொண்டாடலாம்.<span style="color: rgb(0, 0, 153);"> ( இவ்வளவு காலமும் எதுவும் செய்யலயோ )</span><br /><br /><br />இந்த நாட்டிலே சாதி மத பேதம் எதுவும் இல்லை .இருப்பது இரு சாதிகள் மட்டும் தான் ஒன்று காதலை நேசிக்கும் சாதி மற்றது காதலை வெறுக்கும் சாதி.<span style="color: rgb(0, 0, 153);"> ( உண்மைதான் )</span> எது எவ்வாறு இருந்தாலும் நான் சொல்வதை செய்பவன் செய்வதை சொல்பவன். அந்த வகையில் பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து துடைத்தெறிந்தது போல் இந்த நாட்டிலுள்ள கள்ளக் காதலையும் விரட்டி தாய்த் திருநாட்டை பாதுகாப்பேன்.<span style="color: rgb(0, 0, 153);"> (இதற்காக தனி காவல்த்துறை குழுவை நியமித்தால் நல்லது)</span><br /><br /><br />காதலர்களின் எதிர்கால நலன் கருதி ரஷ்யாவின் நிதி உதவியோடு பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம் . முதற்கட்டமாக தங்காலை கடற்கரையில் பெரிய காதலர் களியாட்ட விடுதி ஒன்றை நிறுவவுள்ளோம். அடுத்த காதலர் தினத்தில் திறப்பு விழாவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்<span style="color: rgb(0, 0, 153);"> ( உங்க காதலியும் வருவாவோ.. சீ.. மனைவி)</span> . அது மட்டுமல்ல அனைத்து பேரூந்துகளிலும் பின்வரிசை ஆசனங்களை காதலர்களிற்காக ஒதுக்குவது தொடர்பாகவும் <span style="color: rgb(0, 0, 153);">( இப்படியே போனால் ஒதுக்கப்படாத ஆசனமே இருக்காது போல )</span> திரையரங்குகளில் காதலர் கூண்டுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் <span style="color: rgb(0, 0, 153);">( இது தேவை இல்லை வெளிச்சத்தை எல்லாத்தையும் நிறுத்த சொல்லுங்க ) </span>பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விரைவில் அவை நடைமுறைக்கு வரும். அத்துடன் அடுத்த பொதுத்தேர்தலின் பின் புதிதாக காதல் அபிவிருத்தி அமைச்சை உருவாக்கி அதற்காக அமைச்சர்களையும் நியமிக்கவுள்ளேன் <span style="color: rgb(0, 0, 153);">. ( அப்ப இன்னும் அமைச்சர்களின் எண்ணிகை கூட போகுது போல ) </span>காதலர்களிற்கு நல்ல எதிர்காலம் உண்டாகுக . நன்றிகள் .<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNjzNtLzkon5hNB2sRWxg1HDOO_94HnTxELVoQz3KAlGJeFqZN416yOc00s92ayBvHkb2jSoYO_wsid-GPOu1cEegJzhBAKsDygWBL2QsMDBz7Oe3p6uGtptgcAoLWirrQ2mlOoucVqYg/s1600-h/2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 192px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNjzNtLzkon5hNB2sRWxg1HDOO_94HnTxELVoQz3KAlGJeFqZN416yOc00s92ayBvHkb2jSoYO_wsid-GPOu1cEegJzhBAKsDygWBL2QsMDBz7Oe3p6uGtptgcAoLWirrQ2mlOoucVqYg/s200/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5436866981818969506" border="0" /></a><br /><br /><br /><span style="font-weight: bold;"><br />கௌரவ அமைச்சர் முரளிதரனின் காதலர் தின வாழ்த்துச்செய்தி</span><br /><br />காதலர்தின நன்நாளிலே உங்களிற்கு வாழ்த்துச் செய்தி தெரிவிப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன் .இன்று எங்கள் நாட்டை எடுத்துக் கொண்டால் அனைத்து காதலர்களும் எவ்வளவு சுதந்திரமாக காதலை கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் அதற்கு காரணம் எங்கள் மதிப்புக்குரிய சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் தான்.எதிர்க்கட்சிகளோடு இருந்து நாம் எங்களின் காதலர்களையும் அவர்களின் காதலையும் வளர்க்க முடியாது. ஆளும் கட்சியோடு இணைந்து செயற்பட்டால் தான் எங்கள் காதலர்களையும் முன்னேற்றமடைய செய்யலாம்.இன்று மேல் தென் மாகாண காதலர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் பல சுக போகங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். எங்கள் காதலர்களும் அனுபவிக்கவேண்டும்.<span style="color: rgb(0, 0, 153);">( என்னத்தை சொல்ல வாறிங்க )</span> அதற்காக எங்கள் சனாதிபதியோடு இணைந்து கிழக்கின் உதயத்தின் கீழ் கிழக்கின் கடற்கரைகளில் மரங்கள் வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.<span style="color: rgb(0, 0, 153);">(நல்ல அடுக்கடுக்கா நடுங்க என்ன ) </span>விரைவில் இது நடைமுறைப்படுத்தபடும்.<br /><br /><br />அன்று நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கும் போது பிரபாகரனுக்கு தெளிவாக கூறியிருந்தேன் போராடுவதன் மூலம் எம் காதலர்களோ காதலோ வளராது என்று.<span style="color: rgb(0, 0, 153);">( ஓகோ! இதுவும் ஒரு காரணமா )</span> இன்று அனைத்து காதலர்களும் அதனை உணர்ந்து இருக்கின்றார்கள். அனைத்து காதல்களும் வளர வாழ்த்துக்க .<br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNaqAyypqexPtXGBX0esnaZden4-WCBuUNqrZsil9o_Oc3BgwK7JcHl3jjJy-8uob1hbWUdWDkSBYyChBfwrTN_RdOnDUaYeZAdczcxrF8fnr01gbdVvDzg7LMBP3N4YHmFzV-u30A9os/s1600-h/3.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 186px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNaqAyypqexPtXGBX0esnaZden4-WCBuUNqrZsil9o_Oc3BgwK7JcHl3jjJy-8uob1hbWUdWDkSBYyChBfwrTN_RdOnDUaYeZAdczcxrF8fnr01gbdVvDzg7LMBP3N4YHmFzV-u30A9os/s200/3.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5436867192558867810" border="0" /></a><br /><br /><br /><span style="font-weight: bold;"><br />மதிப்புக்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காதலர்தின வாழ்த்துச்செய்தி</span><br /><br />அனைத்து காதலர்களிற்கும் எனது வாழ்த்துக்கள்.இன்று சமாதானமாகவும் சுதந்திரமாகவும் காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்கள். அன்று குச்சு ஒழுங்கைகளில் காதலை கொண்டாடிய எம் காதலர்கள் இன்று தலைநகரில் கொண்டாடும் அளவுக்கு நிலைமையை கொண்டு வந்தது எங்கள் சனாதிபதி தான்.<span style="color: rgb(0, 0, 153);">( எங்கட யாழ் காதலர்கள் தானே ? எப்படி கண்டுபிடிச்சிட்டனே )</span> இன்று தலைநகரில் வெள்ளவத்தை கடற்கரை பற்றைகளிற்கு சென்று பாருங்கள் , சினிமா திரையரங்குகளில் நுழைந்து பாருங்கள் , பெரிய விடுதிகளிற்கு சென்று பாருங்கள் , வெள்ளவத்தை இணைய கூண்டுகளுக்குள் சென்று பாருங்கள் எங்கள் காதலர்கள் எவ்வளவு உல்லாசமாக மெய்மறந்து கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள் என்று <span style="color: rgb(0, 0, 153);">( ஓகோ அது எங்கட காதலர்களா பார்க்க தெரியவே இல்லையே ) </span>, அந்த வகையில் எங்கள் சனாதிபதிக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம்<br /><br />வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்கின் கடற்கரையோர முட்கள் , குச்சொழுங்கை முட்கள் என்பவற்றை அழிக்க திட்டமிட்டுள்ளதோடு யாழ் பல்கலைக்கழகதிற்கு அருகில் காதலர்களிற்காக தனியான இடம் ஒன்றையும் ஒதுக்க திட்டமிட்டுள்ளதோடு அனைத்து காதலர்களிற்கும் பாலியல் கருத்தரங்குகளை நடத்தி<span style="color: rgb(0, 0, 153);">( இன்று தேவையான ஒன்று தான்)</span> பங்கு பற்றும் காதலர்களிற்கு ஒரு டசின் <span style="color: rgb(255, 0, 0);">-------</span> களையும் <span style="color: rgb(0, 0, 153);">( இந்த சொல் தணிக்கைக் குழுவினால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது ) </span>வழங்க திட்டமிட்டுளோம்.இதனால் வருங்காலத்தில் எம் காதலர்களும் பயமின்றி காதலை வளர்க்க வழிவகுக்கும்.நன்றிகள்<br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvQbi7n2HkvAlhHXvTBGG5F6F4CdqVMEmGxcdtgG2Tv01xnPeDrP25CwuFVpROszGfUqnqN6S74dU1Xx0i429mYWLKgG3GwqWgani9qyo_nd0xjhKI3AuPpXqxopjnmmmf5C-wfVgE95c/s1600-h/4.png"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 134px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvQbi7n2HkvAlhHXvTBGG5F6F4CdqVMEmGxcdtgG2Tv01xnPeDrP25CwuFVpROszGfUqnqN6S74dU1Xx0i429mYWLKgG3GwqWgani9qyo_nd0xjhKI3AuPpXqxopjnmmmf5C-wfVgE95c/s200/4.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5436867739316414962" border="0" /></a><br /><br /><br /><br /><br /><span style="font-weight: bold;">கௌரவ நாடளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனின் காதலர் தின செய்தி</span><br /><br /><br />காதலர்தின நன்நாளில் எங்களுடைய காதலர்களைப் பாருங்கள் . எத்தனை காதலர்கள் இன்று பிரிக்கப் பட்டிருக்கின்றார்கள் . எத்தனையோ காதலர்கள் இன்று சந்திக்க வழியின்றி முகாம்களில் தொடர்பின்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் .<span style="color: rgb(0, 0, 153);">( முகாமில் இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கா ? எப்படிதான் கண்டு பிடிக்கிறாங்களோ !) </span>அது மட்டுமா இன்று வடக்கில் காதல் பரிசுப் பொதிகளிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. காதலர்கள் பெரும் விலை கொடுத்து அவற்றை வாங்க வேண்டியுள்ளது எம் காதலர்களின் இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் நல்ல தீர்வொன்றை முன் வைக்க வேண்டும். இது தொடர்பாக நான் இந்தியா சென்று கலந்துரையாடினேன். அவர்கள் அது தொடர்பாக அரசாங்கதிற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதி மொழி அளித்தார்கள். அத்துடன் தமிழ்நாட்டு அரசு தொப்புள்கொடி காதலர்களிற்காக நல்ல இன ரோஜா பூக்களை அனுப்ப முன்வந்துள்ளனர்.தற்போது வீடு வீடாக சென்று சேகரித்து வருகின்றனர் .விரைவில் அது வந்து சேரும்.அனைத்து காதலர்களிற்கும் நல்ல எதிர்காலம் உண்டாகட்டும்.<br /><br /><br /><br /><br />நண்பர்களே என் வலைப்பூவுக்கு வருகை தந்து பொறுமையாக வாசித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் தந்தமைக்கு நன்றிகள் .வேறை ஒரு வித்தியாசமான பதிவோடு சந்திப்போம் . அனைவருக்கும் முற்கூட்டிய காதலர்தின வாழ்த்துக்கள்.கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-59574498713445477072010-02-06T01:31:00.000-08:002010-02-06T01:39:50.400-08:00அழகு எது ?...அழகு எது ?... அழகு எது ?...நண்பர்களே இந்த பதிவிலே " அழகு எது ? " என்ற தலைப்பில் கவிதை போல ஏதோ ஒன்று எழுதியுள்ளேன் . ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். இது வைரமுத்துவின் " மகிழ்ச்சி " என்ற கவிதையின் சாயலை ஒத்தது. அதைக்கேட்டு எங்கள் சமூகத்தோடு சம்மந்தப்படுத்தி எழுதியுள்ளேன் . படித்துப் பாருங்கள்<br /><br /><br /><br /><span style="font-weight: bold;">தமிழ்ப்பதிவருக்கு அழகு எது ?</span><br /><br />தினமும் பதிவு எழுதிப்போட்டு வாசிகர்களிற்கு திணிப்பது.....<br /><br />இல்லை<br /><br />தன்னைப் பற்றி தானே புகழ்ந்து பதிவு எழுதுவது.....<br /><br />இல்லை<br /><br />நாறிப்போன சினிமாவையும் மலிந்து கிடக்கும் விளையாட்டையும் மட்டும் தூக்கிப் பிடிப்பது.....<br /><br />இல்லவே இல்லை<br /><br />தமிழ்ப்பதிவருக்கு அழகு தாய் மொழி தமிழில் தப்பின்றி பதிவு எழுதுதல்.....<br /><br /><br /><br /><br /><span style="font-weight: bold;">காதலனுக்கு அழகு எது ?</span><br /><br />காதலி தங்கமாக பாதுகாத்து வளர்த்த அங்கங்களை வர்ணித்து புகழ்தல்.....<br /><br />இல்லை<br /><br />காதலியின் உடல் வெப்பநிலையை அடிக்கடி பரிசோதித்து மருந்து கொடுத்தல்.....<br /><br />இல்லை<br /><br />காதலியை மடியில் படுத்தி பேன் இருக்கும் இடத்தில் சொறிந்து விடுதல்.....<br /><br />இல்லவே இல்லை<br /><br />காதலனுக்கு அழகு காதலன் என்ற நிலையில் மட்டும் இருந்து காதலை பேணுதல்.....<br /><br /><br /><br /><br /><span style="font-weight: bold;">இந்து சமயத்தவனுக்கு அழகு எது ?</span><br /><br />நெற்றியில் பட்டை அணிந்து கோவிலை முப்பது தரம் சுற்றுதல்.....<br /><br />இல்லை<br /><br />நூற்றெட்டு கோவில் சென்று அர்ச்சனை செய்தல்....<br /><br />இல்லை<br /><br />கடவுள் படத்தை வீடு எங்கும் மாட்டி வைத்தல்....<br /><br />இல்லவே இல்லை<br /><br />இந்து சமயத்தவனுக்கு அழகு தான் எப்பவும் இந்து சமயத்தவன் என்பதை மறவாது இருத்தல்.....<br /><br /><br /><br /><br /><span style="font-weight: bold;">தமிழ் வானொலிக்கு அழகு எது ?</span><br /><br />நேயர்களிற்கு பரிசுகளை அள்ளி வழங்குதல்.....<br /><br />இல்லை<br /><br />இருக்கின்ற மூன்றுக்குள் போட்டியிட்டு முன்னுக்கு வருதல்.....<br /><br />இல்லை<br /><br />நேயர்களின் சுக நலங்களை திருப்ப திருப்ப விசாரித்தல்.....<br /><br />இல்லவே இல்லை<br /><br />தமிழ் வானொலிக்கு அழகு பழமை வாய்ந்த தமிழ் மொழியை கொல்லாமல் இருத்தல்.....<br /><br /><br /><br /><br /><span style="font-weight: bold;">பெண்ணுக்கு அழகு எது ?</span><br /><br />அங்கமெல்லாம் தங்க நகைகளை தொங்க விடுவது .....<br /><br />இல்லை<br /><br />அங்க அசைவுகளை பகிரங்கப்படுத்தும் ஆடை அணிவது.....<br /><br />இல்லை<br /><br />படித்து பட்டம் பெற்று பணம் சம்பாதிப்பது....<br /><br />இல்லவே இல்லை<br /><br />பெண்ணுக்கு அழகு அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி அடக்க வேண்டிய இடத்தில் அடக்கி வாழ்வது....<br /><br /><br /><br /><br />வாசித்ததுக்கு நன்றிகள் . மீண்டும் வருக.கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-79858580463062033452010-02-04T23:08:00.000-08:002010-02-04T23:21:07.326-08:00காதல்...காதல்...காதல்...காதல்...காதல்...நண்பர்களே மீண்டும் ஒரு முறை கருணையூரானின் வணக்கம் . தேர்தல் காலம் என்பதால் வீட்டுக்கு சென்றதால் பதிவு போட முடியவில்லை. இந்த பதிவிலே இந்த காதல் என்ற சாமன் இருக்குதானே அதை எப்படி எல்லாம் விபரிக்கலாம் அது வந்தால் என்ன என்ன நடக்கும் என்று என் மனதில் உதித்ததை உங்களுடன் பகிருகின்றேன்.பதிவு ஒன்று போட வேண்டும் என்று அவசரமாக உடனே எழுதி போட்டது. படித்து பாருங்கள்.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQlJs7m5iYFlsI7nYhyphenhyphen38Ea7PK0J3U1ZQRSJMzo9XYngq8g2Z-m2jhIV6LABz_bGz0HNQ2BnYfCsbuwOF6DxVbuEjOUrW7YaYH-poxB1hF3YfJmVLQk0_6oJ7ze7id0X_Z8toJZbg_-5E/s1600-h/romantic_love-7201.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 160px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQlJs7m5iYFlsI7nYhyphenhyphen38Ea7PK0J3U1ZQRSJMzo9XYngq8g2Z-m2jhIV6LABz_bGz0HNQ2BnYfCsbuwOF6DxVbuEjOUrW7YaYH-poxB1hF3YfJmVLQk0_6oJ7ze7id0X_Z8toJZbg_-5E/s200/romantic_love-7201.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5434653605978396850" border="0" /></a><br /><br /><span style="font-weight: bold;">காதல் (ஒரு சொல்லில்) :-</span><br /><br />உணர்ச்சி<br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (இரண்டு சொற்களில்) :-</span><br /><br />காமத்திற்கான நுழைவாயில்<br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (மூன்று சொற்களில்) :-</span><br /><br />இரண்டு இதயங்களும் கலக்கும்<br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (நான்கு சொற்களில்) :-</span><br /><br />கவர்ச்சிக்கு அடுத்து காமத்துக்கு முன்<br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (ஐந்து சொற்களில்) :-</span><br /><br />சொல்லாமல் வருவது ஆனால் கொல்லாமல் போகாதது<br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (ஆறு சொற்களில்) :-</span><br /><br />ஊடுருவும் போது இனிப்பு ஊடுருவிய பின் உறைப்பு<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiYwEPYr94PufXunxbigp8qQ1n5QiGF-2z7lyQaRnYzuDV482AAZeEV1JyCqlZPMJAvHNmW5C-cPVMzod58t1NYrRJOFcIxrChJPKE5n5MQq3Kshwb8gi0fg4R6AZ5lu5TXo9UbWZp5QE/s1600-h/Romance.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 136px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiYwEPYr94PufXunxbigp8qQ1n5QiGF-2z7lyQaRnYzuDV482AAZeEV1JyCqlZPMJAvHNmW5C-cPVMzod58t1NYrRJOFcIxrChJPKE5n5MQq3Kshwb8gi0fg4R6AZ5lu5TXo9UbWZp5QE/s200/Romance.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5434653967819482930" border="0" /></a><br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (ஏழு சொற்களில்) :-</span><br /><br />கடவுளால் உயிரினத்துக்காக படைக்கப்பட்டது இன்று மனிதனின் சிறைக்குள் சிக்கித்தவிக்கிறது<br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (எட்டு சொற்களில்) :-</span><br /><br />அழகைக் கூட்டும் பொழுதைக் கழிக்கும் ஓமோன்சுரப்புக்களை பெருக்கும் உறவுகளை பிரிக்கும்<br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (ஒன்பது சொற்களில்) :-</span><br /><br />உருவமற்ற பேய் இது பிடித்து விட்டால் இரவு பகல் தெரியாமல் அலையும்<br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (பத்து சொற்களில்) :-</span><br /><br />மின்னல் போல் இடைக்கிடையே தோன்றி மறைய காமம் மட்டும் இடியாக சிறிது நீடிக்கும்<br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (பதினொரு சொற்களில்):-</span><br /><br />சாதி மதம் குலம் அறியாது நுழைந்து நன்றாக வளரும் போகும்போது அதில் ஒன்றை தூக்கிப்பிடிக்கும்<br /><br /><br /><span style="font-weight: bold;">காதல் (பன்னிரண்டு சொற்களில்):-</span><br /><br />உதட்டின் ஈரலிப்பை கூட்டும்<br />கைகளின் வலிமையை அதிகரிக்கும்<br />நெஞ்சை நிமித்தி காட்டும்<br />கண்கள் செய்வதறியாது துடிக்கும்<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCvsJV_9WtV2J0B-sjdHbZIdAVCI4W196sDy3Agv7Ag8qPqazr6nSmcC2YoKWm4IKjGB3YwOSYVP2JQXPTqX5LKYFWCpJkcTbnMjy4XXdhWBMkd-WNpJQgkRre_kjO3Jo7OnAEFTaxfo8/s1600-h/CoupleInLove.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 120px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCvsJV_9WtV2J0B-sjdHbZIdAVCI4W196sDy3Agv7Ag8qPqazr6nSmcC2YoKWm4IKjGB3YwOSYVP2JQXPTqX5LKYFWCpJkcTbnMjy4XXdhWBMkd-WNpJQgkRre_kjO3Jo7OnAEFTaxfo8/s200/CoupleInLove.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5434654395483597842" border="0" /></a><br /><br /><br /><br />நண்பர்களே என்னுடைய பதிவை வாசித்ததுக்கு நன்றிகள் . மீண்டும் இன்னொரு வித்தியாசமான பதிவோடு சந்திப்போம்.கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-49637997107143762092010-01-19T00:13:00.001-08:002010-01-19T00:31:28.877-08:00இவைகளுக்கும் பேச தெரிந்தால் இப்படிதான் பேசுமா..........நண்பர்களே மீண்டும் ஒரு முறை கருணையூரானின் வணக்கம் . நீங்கள் எல்லாம் நன்றாக பேசுவிங்க, நன்றாக வாதிடுவிங்க , நன்றாக சிரிப்பிங்க . ஆனால் உயிரற்ற சில பொருட்கள் மற்றும் சில உணர்சிகள் பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா . கீழே வாசித்து பாருங்கள் . சற்று ஆழமாக சிந்தியுங்கள்.<br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjg90kVNRoAjpjyE6ktoAwXJarDUrdto2Z61rXJuempLvzbbathj-OCEhIA9T6Yz7U39J3De-5jF2ACrGJprj_IzHRqz_qXq6s2ffyqXIX2kYlZr7bMvvvUFOftHBcveV8Ez-MN5CdcAI/s1600-h/lovers.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 155px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjg90kVNRoAjpjyE6ktoAwXJarDUrdto2Z61rXJuempLvzbbathj-OCEhIA9T6Yz7U39J3De-5jF2ACrGJprj_IzHRqz_qXq6s2ffyqXIX2kYlZr7bMvvvUFOftHBcveV8Ez-MN5CdcAI/s200/lovers.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428361732295432738" border="0" /></a><br /><br />முதலாவதாக <span style="font-weight:bold;">காதல் , காமம்</span> இரண்டும் சந்தித்து பேசினால் எவ்வாறு இருக்கும்<br /><br />காதல் :- ஏய் காமம் ! எதற்காக நான் இருக்கும் இடமெல்லாம் நீயும் வருகின்றாய். உனக்கு வெட்கம் இல்லையா ?<br /><br />காமம்:- ( சற்று கோபத்துடன்) நான் இல்லாமல் நீ தனித்து வாழ முடியுமா ? நான் வந்திருக்காவிட்டால் நீ வந்திருப்பியா ? ஆனால் நீ இல்லாமலும் நான் வாழ்வேன்<br /><br />காதல் :-நீயும் ஒரு கொல்லாமல் கொல்லும் சர்வாதிகாரிதான் .என் இடத்தினுள் புகுந்த நீ இப்போ " நட்பு " என்று பல இடங்களில் புகுந்து விட்டாயே<br /><br />காமம்:- ( ஆணவச் சிரிப்புடன் ) நான் கத்தரிக்காயிலும் இருப்பேன் புடலங்காயிலும் இருப்பேன் நீ யார் கேட்பதற்கு ?<br /><br />பின்னை பாருங்கோவன்<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4hxcKhV68VkPg4hGFk910rEhpIGdk3ux5nJ4s3iXITaOnES44MkNlwzBPwt1DWUga0tH1EkbWa4xjzBiHH4Txi07MQEVG6oaQ2BBuJTwYCpZMy0Jr6YwwdVZxg1Y13jly1kB65X3XZxE/s1600-h/lovers_kiss-t2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4hxcKhV68VkPg4hGFk910rEhpIGdk3ux5nJ4s3iXITaOnES44MkNlwzBPwt1DWUga0tH1EkbWa4xjzBiHH4Txi07MQEVG6oaQ2BBuJTwYCpZMy0Jr6YwwdVZxg1Y13jly1kB65X3XZxE/s200/lovers_kiss-t2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428363076128218002" border="0" /></a><br /><br /><br />அடுத்ததாக <span style="font-weight:bold;">நட்பு , காதல் , காமம் , கல்யாணம் , மரணம்</span> இவைகளின் ஒரு திருவிளையாடல் எப்படி இருக்கு என்று பாருங்கள்<br /><br />நட்பு ஒரு இடத்தில் நீண்ட காலமாக குடிகொண்டிருந்தது. அந்த வழியால் வந்த காதல் நட்பு இருந்த இடத்திற்கு சென்றது :-<br /><br />காதல் :- நட்பே நட்பே ! சிறிது காலம் உன் வீட்டில் இருந்து விட்டு போகலாமா ?<br /><br />நட்பு :- அதுக்கென்ன , அந்த மூலையில் சற்று இருந்து விட்டு செல்.<br /><br />அந்த வழியால் வந்த காமம் இதனை அறிந்து நட்பின் இடத்துக்கு சென்றது<br /><br />காமம் :- நட்பே நட்பே ! சற்று களைப்பாக இருக்கிறது .சற்று இருந்து விட்டு செல்லலாமா ?<br /><br />நட்பு :- அதுக்கென்ன மற்ற மூலையிலே சற்று இருந்து விட்டு செல்<br /><br />மீண்டும் செல்லாமல் அவ்வாறே குடிகொண்டன காதலும் காமமும் . பல காலம் சென்ற பின் கல்யாணம் அங்கு புகுந்து கேட்டது<br /><br />கல்யாணம் :- நானும் இங்கு வந்து இருக்கலாமா ? அப்படி என்றால் யாரை கேட்க வேணும்<br /><br />காமம் :- நான் தானே இப்படி ஒரு இடம் இருக்கு . இங்கே வந்தால் இருக்கலாம் என்று கூறினனே<br /><br />காதல் :- இல்லை இல்லை என்னை தான் கேக்கணும். நான் தான் இங்கே பெரிய ஆள்<br /><br />நட்பு :- ஐயோ என்ர ஐயோ என் வீட்டுக்குள் வந்தே என்னையே மறந்திட்டிங்க. எனக்கு ஒரு மூலை இடம் தாங்க நான் இருந்திட்டு போகிறேன்<br /><br />இவர்களின் சத்தத்தை வீதியால் சென்றுகொண்டிருந்த மரணத்துக்கு கேட்டுவிட்டது.அங்கே வந்த மரணம்<br /><br />மரணம் :- யார் எல்லாம் நீங்கள் , இவை எல்லாம் எனக்கு சொந்தமான இடங்கள் .நீங்கள் எல்லாரும் வந்தேறியகுடிகள் தான் .புறப்படுங்கள்<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_Rf9UJuaR_0xRpmmobgp8rql8x-VykilC6x6D_PRb1E9hMLLuLVbG2wPvL7KYnESZKG1iFcPIMM_kDTqROLU0OeSdA8dYjGbpb2eb1XcbZ8YG8O9CtVYZ8yl4rdofqL9upS09T7i7w0w/s1600-h/shiva.2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 178px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_Rf9UJuaR_0xRpmmobgp8rql8x-VykilC6x6D_PRb1E9hMLLuLVbG2wPvL7KYnESZKG1iFcPIMM_kDTqROLU0OeSdA8dYjGbpb2eb1XcbZ8YG8O9CtVYZ8yl4rdofqL9upS09T7i7w0w/s200/shiva.2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428363458944798578" border="0" /></a><br /><br /><br /><br /><br />அடுத்ததாக <span style="font-weight:bold;">கடவுளிடம் ஒரு மனிதன்</span> பேசுகின்றான்<br /><br />மனிதன் :- கடவுளே !<br /><br />பூவுக்குள் தேனை வைத்தாய்<br />அதை தேனீக்கு சொல்லி வைத்தாய்......<br /><br />கல்லுக்குள் ஈரத்தை வைத்தாய்<br />அதை தேரைக்கு சொல்லி வைத்தாய்......<br /><br />சிற்பிக்குள் முத்தை வைத்தாய்<br />அதை மனிதனுக்கு சொல்லி வைத்தாய்......<br /><br />என்னுள் என்ன வைத்தாய்<br />அதை யாருக்கும் சொல்லி வைக்கும் அளவுக்கு......<br /><br />கடவுள் :- ( சிரித்தவாறே ) தேனீயோ தேரையோ எல்லாம் தேடல் மூலம் தான் கண்டுபிடித்தன .நீயும் உன்னுள் இருப்பதை முதலில் தேடு வாழ்வில் வெற்றி பெறுவாய்<br /><br />மனிதன் :- தேடல் மூலம் நூற்றெட்டு கடவுளை கண்டுபிடித்து இவ்வாறு கேட்டு அலுத்துவிட்டேன் . இன்னும் தேடல் தான் என் வாழ்க்கை என்றால் இன்றிலிருந்து மரணத்தையே தேடுகின்றேன்<br /><br />கடவுள் :- ( நக்கல் சிரிப்புடன் ) மரணத்தை நீ தேட தேவை இல்லை அது தானாக தேடி வரும் .<br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_oii5v2Fu0YQ46feplEl-WAluaI587KUFzYyQ_K2yIAKe7mM9BmUYzEv3MnFmknczY0t01S4-jSX0lPZxV19NOxM3H3hVryganDjbPWGn2cUjB4l0Z8wOivX3MZqVj62WGboS9lVAKEc/s1600-h/moon.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 119px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_oii5v2Fu0YQ46feplEl-WAluaI587KUFzYyQ_K2yIAKe7mM9BmUYzEv3MnFmknczY0t01S4-jSX0lPZxV19NOxM3H3hVryganDjbPWGn2cUjB4l0Z8wOivX3MZqVj62WGboS9lVAKEc/s200/moon.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428363292820665074" border="0" /></a><br /><br />அடுத்ததாக <span style="font-weight:bold;">நிலாவும் மனிதனும்</span> பேசுகின்றார்கள்<br /><br /><br />மனிதன் :- நிலாவே ! இவ்வளவு அழகாக இருக்கின்ற நீ எதற்காக அழுக்கு நிறைந்த பூமியை காதலித்து சுற்றிக்கொண்டிருக்கின்றாய்<br /><br />நிலா :- இல்லை இல்லை நீ இங்கே வந்து பார் எவ்வளவு அழகாக இருக்கிறதே பூமி அதுதான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்<br /><br />மனிதன்:- ஓகோ அப்படியா ! வேண்டாம் நான் அங்கு வந்தால் உன் மீது நான் கொண்ட காதலும் வெறுப்படையலாம் . நானும் இங்கிருந்தே உன்னை காதலிக்கின்றேன்கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-35916818621336400012010-01-11T00:55:00.000-08:002010-01-11T01:22:17.439-08:00தேர்தல் தினத்தில் அரசியல்வாதிகளின் வீட்டில் காலைப்பொழுது.....(சிறு கற்பனை)வணக்கம் நண்பர்களே !<br /><br />நேரம் இல்லாமையால் சிறிது காலம் பதிவு போட முடியவில்லை. இந்த பதிவும் திடீரென எழுதப்பட்ட ஒன்றுதான்.ஏதும் தவறு இருந்தால் மன்னித்து அதை சுட்டிக்காட்டவும்.<br /><br />நண்பர்களே !<br />தெரியும் தானே உங்களுக்கு தேர்தல் ஒன்று வருதாம் எண்டு. நல்லது. அரசியல் எனக்கு அவளவு தெரியாது . எல்லாரும் ஏதோ அரசியல் என்று பதிவு போட்டு முழங்கி தள்ளுறாங்க. நானும் ஏதோ என்னால முடிஞ்சளவு வித்தியாசமா ஒன்றை தருவம் என்று முயற்சித்தேன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-IqiIm0FZDIQsWDuM8ngtzlvw2bQyRqNM4gXPRe7D7TKoSuTtiRVmJPt1P6ahwOGnTw94Qc3k75RZlUKYPbCwf4AxW6ycoKkyNHQ3E6oiwxJhLhuxKfdHh4RUci2GSNhbAYX7haxuRdY/s1600-h/15337-Blue-Person-Standing-At-The-Front-Of-A-Line-Of-Diverse-Voters-Putting-Their-Voting-Envelope-In-A-Ballot-Box-During-A-Presidential-Election-Clipart-Illustration-Image.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-IqiIm0FZDIQsWDuM8ngtzlvw2bQyRqNM4gXPRe7D7TKoSuTtiRVmJPt1P6ahwOGnTw94Qc3k75RZlUKYPbCwf4AxW6ycoKkyNHQ3E6oiwxJhLhuxKfdHh4RUci2GSNhbAYX7haxuRdY/s200/15337-Blue-Person-Standing-At-The-Front-Of-A-Line-Of-Diverse-Voters-Putting-Their-Voting-Envelope-In-A-Ballot-Box-During-A-Presidential-Election-Clipart-Illustration-Image.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425406388721511330" /></a><br /><br /><br />தேர்தல் அன்று எல்லா அரசியல்வாதிகளும் வாக்குபோட தானே வேணும் . எல்லாரும் முதல் நாளே தங்களுடைய வீட்டுக்கு போயிடுவாங்க தானே. ஒவ்வொரு அரசியல் வாதிகளின் வீட்டிலும் காலை வேளை எவ்வாறு இருக்கும் . என்ன என்ன பேசுவாங்க.என்ன என்ன நடக்கும் என்பதை என்னுடைய ஒரு கற்பனையில் தந்துள்ளேன். கூடாமல் அல்லது பிழையா இருந்தா திட்டுவீங்களா. இல்லைதானே.யாரையும் நக்கல் அடிப்பதற்காக இது எழுதப்படவில்லை. ஒவ்வொருவரின் மீது உள்ள அன்பின் மிகுதியினால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்த போது உதித்தது தான் இவை.<br /><br /><span style="font-weight:bold;">மதிப்புக்குரிய மகிந்த ராஜபக்ஷ வீட்டில் :-</span><br /><br />அவர் நித்திரையில் இருந்து 4.30 மணியளவில் எழும்புகின்றார். அரைக்காற்சட்டையை இழுத்து விட்ட பின் கால் கையை நீட்டி முறுக்கெடுத்த படியே அறையை விட்டு வெளியே வரும் போது மனுசிக்காரி முழுகி முடிஞ்சு கூந்தல் ஈரத்தை உலர்த்திக் கொண்டிருந்தா.....<br /> <br />ம :- அம்மே கால் கை எல்லாம் வலிக்குது . இரவு தூக்கமும் சரியா வரல்ல<br /><br />சி :- உங்களுக்கு நான் சொன்னான் தானே கதைக்கும் போது சும்மா சும்மா கையை மேலயும் கீழேயும் ஆட்டாதிங்க எண்டு<br /><br />ம:- சும்மா போங்க ...அப்படி என்ன எனக்கு வயசு போட்டுதா ஆடாமல் அசையாமல் இருக்க<br /><br />சி:- இஞ்சா உங்களுக்கு SMS வந்து இருக்கு சீனா வில இருந்து யாரோ Wish பண்ணி அனுப்பி இருக்காங்க<br /><br />ம:- சரி பிறகு பாப்பம்...நல்ல நேரம் 8:09:59:29 தானே . நேரம் ஆகுது எங்கை எண்ட சிவத்த துண்டு தோய்ச்சு போட்டனீங்களே<br /><br />சி:- கொடியில போட்டனான் வாறன் எடுத்துக்கொண்டு.......<br />கொடியை நோக்கி செல்லும் போது 2 நாய்க்குட்டிகள் துண்டை இழுத்து விளையாடுவதை<br />அவதானிக்கின்றா<br /><br />சி:- அடீக் ஓடுக் ஓடு ... இவளவு பேர் சுத்தி நிண்டும் இந்த நாய்க்குட்டி உள்ளை வந்திட்டுதே ....ஓடுங்க உங்களுக்கு அவரட்ட சொல்லி ஒரு முடிவு எடுக்கிறேன்<br /><br /><br /><br /><br /><span style="font-weight:bold;">மதிப்புக்குரிய சரத் வீட்டில் :-</span><br /><br />5 மணிக்கு அவரின் கைத்தொலைபேசி அலாம் அடிக்கின்றது மனைவி உடனே எழுந்து விட அவர் இன்னும் எழும்புவதாக தெரியவில்லை<br /><br />மனைவி :- நேரம் ஆச்சு ..இண்டைக்கெல்லோ தேர்தல் ..நீங்கள் கேக்கிறீங்க அதையும் மறந்திடிங்களா<br /><br />அவர்:- அட ஆமா என்ன ..ஐயோ நல்ல கனவு ஒண்டு குழப்பிடிங்க நீங்க...அப்படியே நான் ஒரு பெரிய கதிரை ல காலுக்கு மேல கால் போட்டு கொண்டு இருக்கிறன்...அந்த கதிரை சட்டத்தில யாரோ 2 பேர் இருந்து காதைப் பிடிச்சு ஏதோ பேசுற மாதிரி<br /><br />மனைவி :-நீங்க இப்ப 2 ,3 நாளா கனவில என்ன கதைச்ச எண்டு எனக்கு தானே தெரியும். எழும்பி வெளிக்கிடுங்கோ<br /><br />அவர்:- இஞ்சா ரணிலுக்கு போன் பண்ணி எனக்கு நல்ல நேரம் என்ன எண்டு கேளுங்க<br /><br />மனைவி :- இஞ்சாருங்க உங்களுக்கு வெளிநாட்டில இருந்து வாழ்த்தி கனக்க SMS வந்து இருக்கு<br /><br />அவர் :- எல்லாம் அழிச்சிட்டு வெளிக்கிடு பன்சலக்கும் போகணும்<br /><br /><br /><br /><span style="font-weight:bold;">மதிப்புக்குரிய இரா, சம்மந்தன் வீட்டில் :-</span><br /><br />6 மணி இருக்கும் அப்பதான் அவர் எழும்பி வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு வருகின்றார். மனைவியைக் கண்டவுடன்<br /><br />அவர் :- இரவு முழுக்க நித்திரை இல்லை.உடம்பு முந்தின மாதிரி இல்லை ..இயலாது தான் எண்டாலும் எங்கட தமிழ் சனத்துக்கு ஏதாவது செய்திட்டு தான் ஓய்வு பெறணும்.அது இருக்கட்டும் உந்த பஞ்சாங்கத்தை எடுத்திட்டு வா சுப நேரம் என்ன எண்டு பாப்பம்<br /><br />மனைவி :- ம் ..இந்தாங்க ....இஞ்சா ஆருக்கு போட போறிங்க நீங்க<br /><br />அவர்:- அட உனக்கு சொல்ல மறந்திட்டனே ...அதாவது வந்து இப்ப... எங்களுக்கு வந்து...<br /><br />மனைவி:- போதும் போதும் போயிட்டு வந்து சொல்லுங்க<br /><br /><br /><br /><span style="font-weight:bold;">மதிப்புக்குரிய சிவாஜிலிங்கம் வீட்டில் :-</span><br /><br />எந்தவித பயமும் பதற்றமும் இல்லாமல் எழுந்து நெட்டி முறித்த படியே<br /><br />அவர்:- அப்பாடா இந்த கடல் காத்து நல்ல நித்திரை வருது..பேசாமல் ஒண்டும் போடாமல் படுத்திடலாம் போல இருக்கு ....பிள்ளை உந்த Radio ஐ போடு என்ர ராசிக்கு என்ன பலன் எண்டு பாரு பிள்ளை.....மற்ற பக்கத்து வீட்டு பொடிச்சிமாருக்கு வடிவா சொன்னனியா என்ர சின்னம் என்ன எண்டு<br /><br />அவ்வாறே வெளிக்கிட்டு வாக்களிக்க செல்லும் போது எங்கோ இருந்து ஒரு பல்லி சொல்கிறது.அதைக்கேட்ட அவர்<br />பல்லி சனியன் உனக்கு சொல்ல வேறை நேரம் இல்லையா ...கொஞ்ச நேரம் இருந்திட்டு போவம் ..பிள்ளை உந்த பஞ்சாங்கத்தை எடு......<br /><br /><br /><br /><span style="font-weight:bold;">மதிப்புக்குரிய ரணில் வீட்டில் :-</span><br /><br />அவரும் வேளைக்கு எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு தயாராக இருக்கின்றார்.<br />அதுக்கு பிறகு தான் மனைவி எழுந்து வருகின்றார்<br /><br />மனைவி :- என்னப்பா நீங்கள் எதுக்கு வேளைக்கு எழும்பி இருக்கிறிங்க<br /><br />அவர் :- உனக்கென்ன தெரியும் எனக்கு உள்ள சோலி எனக்கு தானே தெரியும்<br />.<br />மனைவி :- அதுக்கு என்ன யோசிக்கிறிங்க<br /><br />அவர்:- ஒவ்வொரு இடத்திலும் போய் என்ன என்ன சொன்ன எண்டு யோசிக்கிறன்<br /><br />மனைவி :- ஆறுதலா யோசிட்டு வாங்க போவம்<br /><br /><br /><span style="font-weight:bold;"><br />கௌரவ அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வீட்டில் இருப்பார் எண்டு நான் நம்பவில்லை</span><br /><br /><br />நன்றி நண்பர்களே.....மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் .அந்த பெண்ணின் நாட்குறிப்பேடு விரைவில் வரும். என் பதிவை வாசித்ததுக்கு நன்றிகள்.கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-15480512062167955242009-12-22T21:10:00.000-08:002009-12-27T02:20:21.366-08:00ஏழைக்குடிசை நோக்கி ஒரு அணி.......<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu6BHN1QhW__PlcM03mJb0CI5CDw6eNv74WBXSVkdvnVEVhK995XLFUH3wBU3N15IdQ0ZuRYvqV7IVyvCs0-FK3dAQghRoAWuUgXSD8c27CMvmZDEhf-OvKJweCsOre6IZrVUcP45Zipc/s1600-h/a.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu6BHN1QhW__PlcM03mJb0CI5CDw6eNv74WBXSVkdvnVEVhK995XLFUH3wBU3N15IdQ0ZuRYvqV7IVyvCs0-FK3dAQghRoAWuUgXSD8c27CMvmZDEhf-OvKJweCsOre6IZrVUcP45Zipc/s320/a.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5418297537878076962" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />வயற்கரை ஓரத்தினிலே<br />வரம்பு ஒரு கரையினிலே<br />வாடைக்காற்று புகுந்து விளையாடும்<br />வரிச்சு மட்டைக் கொட்டில் அது............<br /><br /><br />ஒரு கரையிலே நாலு சுள்ளி விறகுகள்<br />ஒரு கரையிலே நாலு குட்டி போட்ட ஆடு<br />ஒரு கரையிலே பாகற்கொடி படரும் படலை<br />ஒரு குடும்பம் நடுவிலே நாலு பிள்ளைகளோடு அது...........<br /><br /><br />மல்லாந்து படுத்திருக்கும் தந்தை<br />மல்லி சம்பல் அரைக்கும் மூத்த மகள்<br />மடியில் கடைக்குட்டியை தாலாட்டும் தாய்<br />மழை வெள்ளத்தில் கப்பல் விடும் மகன்கள் ..............<br /><br /><br />கார்மேகம் இடி இடிக்கும் நேரம் அது<br />வாய்க்கால் நீர் வழு வழுக்கும் நேரம் அது<br />ரோமங்கள் சிலிர் சிலிர்க்கும் நேரம் அது<br />குழந்தைகள் பசியால் துடி துடிக்கும் நேரம் அது...........<br /><br /><br />பச்சை உடுப்போடு பத்து பேர் சுத்தி வர<br />பனை உயரத்தில் அப்பாவி மூஞ்சை ஒருவன் முன்னால் வர<br />பக்கத்திலே இருவர் பறை அடித்து வர<br />பச்சை வயல் நடுவினிலேயே பசுமையான அணி அது..........<br /><br /><br />வயற்கரை கொக்கெல்லாம் மேலுந்து வட்டமிட<br />வந்தவர் அங்கெல்லாம் கூடியிருந்து திட்டமிட<br />ஒருவர் அதற்குள் மேலெழுந்து சட்டமிட<br />சதுப்பு தண்ணிக்குள்ளேயே நீந்துகிறது அன்னப்பறவை அது........<br /><br /><br />தூறல்கள் உடலை மெல்ல நனைக்க<br />அப்பா படலையை மெல்ல திறக்க<br />வந்தவர் மடலை மெல்ல கொடுக்க<br />அப்பாவும் ஏதோ சொல்ல நினைக்கும் நேரம் அது.........<br /><br /><br />கொச்சை தமிழில் "வணக்கம்" ஒன்று<br />பச்சை கடுதாசியில் கடிதம் ஒன்று<br />நெஞ்சை தொடுகின்றது கைகள் இரண்டும்<br />மூஞ்சை மூஞ்சைகள் மூஞ்சைகளோ ...வேணாம் அது......<br /><br /><br />அது வேணும்...ஓ...அதுவும் தாறம்<br />இது வேணும்...ஓ...இதுவும் தாறம்<br />உது தெரியும்...ஓ...உதுவும் தெரியும்<br />உப்படித்தான் போகணும்...ஓ..உப்படியே போங்க...அது.....<br /><br /><br />சதுப்பு தண்ணிக்குள் தத்தளித்த அன்னம் எங்கே ?<br />அட அதுக்குள்ளேயே ? காணலயே ?<br />மீண்டும் தரை இறங்குறது கொக்கு<br />புகை விட்டபடி பறக்கிறது அன்னம்..........<br /><br /><br />"அப்பா அன்னம் எங்கே" என்கிறான் மகன்<br />"அது திரும்ப வந்தாலும் வரும் வராமலும் போகலாம்"<br />"நீ உன்ர வேலையை பாரு"<br />"வெற்றிலை தட்டு எங்கே" என்கிறார் அப்பா .........<br /><br /><br />------------------------------------------------------------------------------------<br /><br /><br />இது <span style="font-weight: bold;">அடுத்த பதிவு</span> பற்றிய ஒரு தகவல்<br /><br />நண்பர்களே !<br /><span style="font-weight: bold;">வெள்ளவத்தையில்</span> தற்கொலை செய்த <span style="font-weight: bold;">ஒரு பெண்ணின் நாட்குறிப்பேடுகள்</span> கிடைக்கப்பெற்றுள்ளன.அது தற்போது நக்கல் நடராசுவிடம்<br />அவரின் நக்கல் எழுத கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பதிவில் இருந்து அவற்றுள் முக்கியமானதை ஒரு தொடராக பதிவு செய்யவுள்ளேன் .....எதிர்பார்த்திருங்கள்....கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-11144281305244513162009-12-16T23:07:00.000-08:002009-12-18T02:52:28.472-08:00வருங்கால யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ்க்குடும்பம்இது எதிர்வரும் சில வருடங்களின் பின் யாழ்ப்பாணம் மற்றும் யாழ்ப்பாணத்தின் தமிழர்களின் நிலையை எதிர்வு கூறும் ஒரு பதிவு. நெல்லியடியில் வசித்து வரும் ஒரு சிறிய குடும்பத்தின் உரையாடல் மூலமாக சுருக்கமாக உங்களிற்கு தந்துள்ளேன்.ஒரு விடுமுறை நாளில் பொழுதைக் கழிப்பதற்காக கசூர்னா கடற்கரைக்கு செல்கின்றனர் இந்த குடும்பம். குடும்பத்தில் அம்மா , அப்பா , மகன் பெயர் சைலேஷ் ,மகள் பெயர் திரேசியா (எங்கை இந்த பெயரை தேடிப்பிடிச்சாங்களோ). சைலேஷ் தரம் 8 , திரேசியா தரம் 10, (இரண்டா...ம்...கொஞ்சம் படிச்சவங்க போல) ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கின்றார்கள்.(தமிழை ஒரு பாடமா எடுக்க மறக்காதிங்க)<br /><br />அம்மா :- சைலேஷ் , என்ன செய்யுறாய் ? வெளிக்கிடன்...நேரம் ஆகுது...<br /><br />மகன் :- பொறுங்கம்மா ...மாற சீன் ஒண்டு...என்ர Facebook ல வெள்ளைக்காரி போல Friend Request பண்ணி இருக்கு...( அட பாவிங்களா இப்பவே Facebook கு வந்திட்டீங்களா) <br /> <br />மகள் :- ஐயோ ! இல்லையடா தம்பி ,உது என்ர Friend (கடவுளே !இப்படியும் சந்தேகம் வர தொடங்கிட்டா) <br /><br />மகள் :- அம்மா ! நான் எந்த Dress போடுற...தோய்ச்சுப் போட்ட அந்த Black Denim இன்னும் வடிவா காயல்ல ( எதைப்போட்டா என்ன எத்தனை போட்டா என்ன...)<br /><br />அம்மா :- ஏன் ? அந்த White Denim ஐ போடன்...இந்த Black T Shirt கு நல்லா இருக்கும் (அப்படியெல்லோ இருக்கணும் அம்மா எண்டா)<br /><br />அப்பா :- என்ன தாயும் மகளும் ஒரே மாதிரி Dress , ஒரே மாதிரி Hair Style..பின்னால பாக்க வித்தியாசமே தெரியல ( எனக்குப் புரியுது..ஆனால் அம்மாக்கு புரியணுமே...)<br /><br />அம்மா :- போங்க நீங்க வேற ...நீங்க தானே சொன்னிங்க Straight பண்ணிணா நல்ல இருக்கும் எண்டு...<br /><br />அப்பா :- நான் எங்கை சொன்னான்...நீதானே திரேசியாக்கு நல்லா இருக்கு நானும் செய்யட்டா எண்டு கேட்டாய்... (உண்மையா திரேசியாக்கு தான் நல்லா இருக்கோ...இல்லை...)<br /><br />மகன் :- சரி சரி... அம்மாக்கும் அக்காக்கும் வடிவாதான் இருக்கு ...சரி போவம் நாங்க...( அட நீயுமா)<br /><br />அப்பா :- ம்...சரி ...எல்லாரும் உங்க Phone , IC எல்லாம் எடுத்தாசா ? (அட இந்த IC கொண்டு போற இன்னும் விடல்லயா)<br /><br />அவ்வாறே பேசிக்கொண்டு நெல்லியடி பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்கின்றனர்.<br /><br />அம்மா :- என்ன திரேசியா Phone ஐ அமத்திக் கொண்டே வாராய் ( விடுங்கப்பா...Phone ஐ தானே அமத்திசு)<br /><br />மகன் :- ஓம் அம்மா இவ எப்பவும் Phone தான் (பொறு தம்பி பொறு...)<br /><br />மகள் :- போடா பிசு ...இல்லை அம்மா நான் இண்டைக்கு Class வரமாட்டன் எண்டு Sir கு SMS போடுறன் அம்மா...( வாத்திமாருக்கு நுங்குதான்)<br /><br />அப்பா :- நீங்க போங்க ...நான் Cargills ல போய் Bill கட்டிட்டு வாறான்.<br /><br />மகன் :-அப்பா என்ர Phone கும் கட்டிவிடுங்கபா ( ம்...விடாதே விடாதே)<br /><br /> <br />அவ்வாறே பேசியபடி பஸ்ஸுக்காக காத்திருக்கின்றார்கள்.<br /><br />மகன் :- அப்பா "யாப்பனய" எண்டு Board போட்டு பஸ் ஒண்டு வருது போல ஏறுவம்.<br /><br />அம்மா:- ஓமப்பா நிண்டு பாக்கேலா ஏறுவம்.<br /><br />அனைவரும் அந்த வண்டியில் ஏறுகின்றனர்.கடைசி ஆசனத்தில் திரேசியாவின் நண்பி தமிழரசி தன்னுடைய காதலன் அப்துல்லாவுடன் இருப்பதைக் திரேசியா காண்கின்றாள்.<br /><br />மகள் :-அம்மா இதுதான் நான் சொன்னன் அந்த Girl தமிழரசி , அது அவட Boy Friend அப்துல்லா...( தமிழரசி தாடி ரொம்ப பிடிக்குமோ...அப்துல்லா உன்னை சொல்லி குற்றம் இல்லை...)<br /><br />அம்மா:- எங்கை போறிங்க பிள்ளை ( கஷ்ரப்பட்டு கடைசி ஆசனம் பிடிச்சு வர நீங்க வேற ....முன்னுக்கு போங்க அம்மா)<br /> <br />தமிழரசி:- படம் பாக்க போறம் ( எங்கை போனாலும் ஒண்டு தானே )<br /><br />மகள் :- நாங்கள் கசூர்னா Beach கு போறம்<br /><br />தமிழரசி:- நான் Night உனக்கு அடிச்சன் உன்ர Phone Waiting ல இருந்திச்சு.<br /><br />மகள்:- மெல்லமா கதை அம்மா இருக்கா...நான் பிறகு சொல்றன்.(அம்மாவும் முந்தி உப்பிடிதான் நீ சொல்லு பிள்ளை)<br /><br /><br />அவ்வாறே பஸ் வல்லை நகரை தாண்டுகிறது.அப்பா நடத்துனரிடம் பஸ் Radio ஐ போடும் படி கேக்கின்றார். நடத்துனரும் Radio ஐ இயக்குகின்றார்.<br /><br />அப்பா :- என்ன தம்பி ..ஐயோ இவங்க "முதல் தரம்" "முதல் தரம்" எண்டு சொல்லியே உயிரை எடுத்திடுவாங்க ( அட இந்த சண்டை எப்ப தான் முடியப் போகுதோ)<br /><br />மகன் :- அந்த வெற்றில விடுங்க லோஷன் Uncle ர மகன் செய்யுற நிகழ்ச்சி இப்ப ( என்ன மகனுமா )<br /> <br />நடத்துனர்:- இல்லை தம்பி ...அவங்க எனக்கு ஒரு DVD Player தந்திருக்காங்க..அந்த நன்றிக்கடன் வேண்டாமா..( அவுஸ்ரேலிய வானொலில அரைக் கொத்து அரிசி கொடுக்கிறாங்களாம்...விசாரிச்சு பாருங்க...)<br /><br />அப்பா :- அப்ப நன்றிக்கடன் மட்டும் தானா இது ...ம்...<br /><br /><br />அவ்வாறே பஸ் புத்தூரை அடையும் போது வாகன நெரிசல் ஏற்படுகின்றது.மக்கள் கூட்டம் குவிந்து வேடிக்கை பாக்கின்றது<br /><br />அப்பா :- என்ன நடந்தது ?<br /><br />நடத்துனர் :- அது ஏதோ Accident...மாத்தறை ஆள் யாரோ செத்திட்டாங்களாம்.<br /><br />பஸ் தொடர்ந்து செல்கிறது. நகரை அண்மிக்கும் போது மீண்டும் வாகன நெரிசல்...<br /><br />நடத்துனர் :- அது அவங்கட பெரெரா போகுது அதான்...( புத்த பகவனே ! அரோகரா...)<br /><br />இது இவ்வாறு இருக்க மகன் சத்தம் போடாம தன்னுடைய வேலையை பாத்துக்கொண்டிருந்தான், அவன் தீடீரெண்டு ஒரு பத்து ரூபாய் எடுத்து ஏதோ எழுதி யாருக்கும் தெரியாம இரண்டு பத்து ரூபாய் தாளை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுக்கின்றான். அவளும் அதற்கு பதிலாக ஒரு இருபது ரூபாய் எடுத்து எதோ எழுதிக் கொடுக்கின்றாள். ( அட விடுங்கப்பா... காசு மாத்தி இருக்காங்க போல)<br /><br />யாழ் நகரை வந்தடைகின்றனர்.<br /><br />மகன் :- அம்மா தண்ணி விடாய்குது. Kiri Packet ஒண்டு வாங்கி தாங்க.( இந்த சாமான் இங்கயுமா)<br /><br />அம்மா :- பொறு அந்த முஸ்லிம் கடைல இருக்கும் குடிப்பம் <br /><br />மகள் :- அப்பா அந்த English பட DVD வாங்கி போவமா ( வாங்கி கொடுங்கப்பா ஆங்கில அறிவு கூடும் தானே)<br /><br />அப்பா:- அங்க வாங்கி வைச்சிருக்கிற பாக்கவே நேரம் இல்லை...(இது வேறையா)<br /><br />மகன் :- அம்மா அங்கை , என்ர Class ல படிக்கிற கஷ்ரின் போறான்.<br /><br />அம்மா :- பிறகு பாப்பம் ..வா ..நாங்க அடுத்த பஸ் எடுப்பம்.<br /><br />அனைவரும் காரைநகர் பஸ் தரிப்பிடம் சென்று ஏறுகின்றார்கள். ஒரு மணித்தியால பயணத்தின் பின் காரைநகரை அடைந்து பிறகு நடந்து சென்று கசூர்னா கடற்கரையை அடைகின்றனர். விடுமுறையோ என்னவோ சனக்கூட்டம் நிறைந்து காணப்பட்டது<br /><br />அம்மாவும் அப்பாவும் அமர்ந்தவாறே தம் பழைய காதல் நினைவுகளை மீட்டுகின்றனர். மகனும் மகளும் இயற்கையை ரசித்தவாறு நடக்கின்றனர்.<br /><br />அப்பா:- என்னப்பா ! நாங்க அப்ப அந்த ஒழுங்கைக்க தானே நிண்டு கையைப் பிடிச்சு கதைச்சம். இப்ப பாருங்க...( அப்பா வேண்டாம் )<br /><br />அம்மா:- ம்...அதுவும் எவளவு பயந்து பயந்து...<br /><br />அப்பா:- (அப்பா, அம்மாவின் கூந்தலை தடவியபடியே ) கள்ளி உனக்கு எப்பவும் பயந்தான்...( விடுங்கப்பா , அம்மா இண்டைக்கு தான் முழுகி இருப்பா போல ...கூந்தல் வாசனை இழுக்குது போல...)<br /><br />அம்மா :- ( அம்மா, மகன் , மகள் எங்கே என கடைக்கண்களால் தேடியவாறே) என்னப்பா இதுகள் இரண்டும் எங்கயோ போட்டுதுகள் போல<br /><br />அப்பா:- இப்ப ஏன் உனக்கு அதுகளை ...ஆறுதலாக வரட்டன் ( உண்மையாதான் அம்மா முழுகி இருக்கா போல...பிறகென்ன நான் சொல்ல வேண்டுமா...)<br /><br /><br /><br />மகனும் மகளும் ஒரு புறம் கடலைப் பார்ப்பதும் கடைக்கண்களால் சூழலை நோக்குவதுமாக ......காதலர்கள் குடைக்கம்பிகளை எண்ணியபடியாக.......வியாபாரிகள் சிங்கள தமிழ் மொழிகளில் கத்திகொண்டே உலா வந்தனர்...தனியாக இருந்த திரேசியா ஐ அவதானித்த ஒரு வியாபாரி...<br /><br />வியாபாரி:- (வியாபாரி , திரேசியாவின் உடல் முழுக்க கண்களால் மேய்ந்தபடியே)<br />தங்கச்சி வதுரு போத்தல் வேணுமா...ஏன் தனிய ஈக்கிறிங்க ( தண்ணி காட்ட வெளிக்கிட்டான் ...)<br /><br />திரேசியா:- (மேற்சட்டையை சரி செய்தவாறே) நான் தனிய இருந்தா உங்களிற்கு என்ன ? ( விடுங்கப்பா...மேற்சட்டையை மேல இழுதால் கீழ...)<br /><br />வியாபாரி:- இல்லை தங்கச்சி என்ர போன் ல சல்லி இல்லை . அவசரமாக ஒரு SMS போடணும் அதான்...( நல்லா புரிஞ்சிடாங்கப்பா)<br /><br />திரேசியா:- அதுக்கென்ன போட்டுட்டு தாங்க .. ( அதுதானே இதில என்ன இருக்கு )<br /><br />இனி சொல்லவேண்டுமா அவன் திரேசியாவின் இலக்கத்தை எடுத்திட்டான். இனி என்ன இரவு ஆரம்பிக்க கூடும்.<br /><br />பின்னுக்கு ஒட்டி இருந்த மணலை தட்டியவாறே அம்மாவும் அப்பாவும் மகனையும் மகளையும் தேடுகின்றனர்.<br /><br />மகன் சத்தம் போடாம இருந்து Phone Camera ஐ Zoom பண்ணி பண்ணி ஏதொ எடுக்கின்றான் ( அட விடுங்கப்பா ....இயற்கையை ரசிச்சு படம் பிடிக்கிறான்)<br /><br />மகள் போனையும் அமத்தியபடியே அக்கம் பக்கம் பார்வைகளை விட்டபடியே இருந்தாள் .அம்மா அப்பா மகன் மகள் மீண்டும் இணைகின்றனர்.<br /><br />மகன்:- எங்கை அம்மா இவளவு நேரமும் இருந்திங்க<br /><br />அம்மா:- இல்லையடா ...அப்பாக்கு தலைக்கே ஒரே பேன் ஆக இருந்திச்சா அதான் பாத்திட்டு இருந்தன் ( அப்ப மகனுக்கு பேன் எடுக்கிற யாரு)<br /><br />மகன் :-(மனசுக்குள் நினைக்கின்றான்) ஓகோ அப்படியா ....அப்ப இவளவு நேரமும் நான் படம் பிடிச்சது பேன் பாத்துக்கொண்டிருந்தவங்களைத்தானா<br /><br />அப்பா :- சரி நேரம் ஆகுது போவம் வாங்க ( அது சரி உங்க வேலை முடிஞ்சு தானே)<br /><br />அம்மா :- போகேக்க கடைல சாப்பாடு எடுத்திட்டு போவம் ..இனி யாரு சமைக்கிற போய் (ம்...நல்ல முடிவு அம்மா)<br /><br />அனைவரும் பஸ்ஸில் ஏறி யாழ் நகரை அடைந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு பருத்துறை பஸ் எடுத்து வீடு செல்கின்றனர்<br /><br />வாங்கி வந்த சாப்பாட்டை அனைவரும் கூடி சாப்பிடுகின்றனர். ஒரு புது இலக்கதிலிருந்து திரேசியாவுக்கு Call அடிக்கின்றது.அவள் Cut பண்ணியவாறே சாப்பிட்டு முடிக்கின்றாள் . சாப்பிட்டு முடித்த சைலேஸ்ம் அந்த இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்தவாறே படுக்க தன் அறைக்கு செல்கின்றான். திரேசியா புது இலக்கத்துக்கு "Who R U " எண்டு அனுப்பியவாறே படுக்க.... இல்லை இல்லை.... படுக்கை அறைக்கு செல்கின்றாள்.... அப்ப அம்மாவும் அப்பாவும் ????? ( ஐயோ வாயை மூடிட்டு வாசியுங்க ) .....அவங்க பாவம் Panadol ஐ போட்டவாறே படுக்க செல்கின்றனர்.<br /><br /><br /><br /><br />இது என்னுடைய கற்பனை மட்டுமே...இங்கு குறிப்பிட்டுள்ள பெயர்கள் யாவும் கற்பனையே...யாரையும் பாதிப்பதற்காக நான் எழுதவில்லை...நல்ல ஆதரவு கிடைத்தால் இன்னும் தொடரும்...கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-56002340232186191652009-12-07T19:14:00.000-08:002009-12-07T19:31:17.112-08:00அம்மாக்கே ஒரு தாலாட்டு......அன்பை இன்பமாக்கி இன்பத்தை கருவாக்கி<br />கருவை உரு ஆக்கி உருவை உடலாக்கி<br />உடலை இடை தாங்க இடைக்கிடையே வலிதாக்க<br />வலிகள் பலியெடுக்க பக்குவமாய் ஈன்றெடுத்த தாயே !<br /><br /><br />சித்திரையில் வந்துதித்த சிக்கன செல்வமே என்று<br />முத்திரை பதிக்க வந்த ஆழ்கடல் முத்தே என்று<br />நித்திரையை நீறாக்கி மாத்திரையை சொத்தாக்கி<br />பத்தரை மாதமாய் பக்குவமாய் பாலூட்டி வளர்த்த தாயே !<br /><br /><br />புள்ளி மானே துள்ளி வா என்று <br />அள்ளி அள்ளி சோற்றை ஊட்டி<br />சொக்கை நுள்ளி இடுப்பைக் கிள்ளி<br />பள்ளி அனுப்பி பக்குவப்படுத்திய என் தாயே!<br /><br /><br />குலப் பண்பை தென்பாக பிடி என்றும்<br />நிலச் சொத்தை நாலாக பிரி என்றும்<br />மூலச் சுவட்டை அழியாது பார் என்றும்<br />தலம் தலமாய் தாவிச் சென்ற என் தங்கத் தாயே!<br /><br /><br />மொரட்டுவையில் திருட்டு என்றால் வெருட்டுவாய் கவனம் என்று<br />இங்கும் டெங்காம் என்று தூங்கதே எங்கும் என்பாய்<br />ஆசையாய் சாப்பிடு காசைப் பார்க்காதே தசையே இல்லை என்பாய்<br />நூற்றெட்டு சொல்லி நெற்றித் திலகம் இட்ட வெற்றித் தாயே!<br /><br /><br /><br />அந்தமில்லா பிறப்பினிலே உன் சொந்தமாய் நான் உதிக்க<br />கள்ளமில்லா நெஞ்சினிலே உன் பிள்ளையாய் நான் உதிக்க<br />என்ன தவம் செய்தேனோ ?என்ன புண்ணியம் செய்தேனோ?(நான்)<br />என்ன பாவம் செய்தாயோ ?என்ன அநியாயம் செய்தாயோ?(நீ)<br /><br /><br />தாயே !<br /><br /><br />விதி விளையாடும் போது வீதிகள் தெரிவதில்லை<br />சதி இருக்கும் போது சாதிகள் புரிவதில்லை<br />நிதி இருக்கும் போது நீதிகள் மெய்ப்பதில்லை<br />பதி இருக்கும் போது பாதியில் விடுவதில்லை<br /><br /><br />பொறுத்திருப்போம் தாயே !<br /><br /><br />கதி என்னவென்று அறிய காத தூரம் இன்னும் இல்லை.....................கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-90527747346665564792009-11-24T23:54:00.000-08:002009-11-25T00:02:42.292-08:00முக்கி முக்கி எழுதிய முதற்பதிவுநண்பர்களே ! <br />வலைப்பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.புனைபெயரோடு என் சொற்கணைகளை இணையத்தினூக அணைகடக்க வைக்க வந்திருக்கும் நான்.... <br /> <br />சுற்றிக் கொண்டிருக்கின்ற பூமியில் இருந்துகொண்டே சுத்திக் கொண்டிருக்கும் சனத்தை <br />சுத்தி சுத்தி பார்த்துக்கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் தான்.... <br /><br />என் பெயரைப் பார்த்து நான் கருணையானவன் என நீங்க நினைத்தால் அது என் தப்பு அல்ல.......<br /><br />என் பதிவுகளைப் பார்த்து நான் கருணையற்றவன் என நீங்க நினைத்தால் அதுவும் என் தப்பு அல்ல....... <br /><br />கருவிலிருந்தே கணைகளை கேட்டு கேட்டு வளர்ந்ததால் இவன் கருணையூரான் என என நீங்க நினைத்தால் அதுவும் என் தப்பு அல்ல....... <br /><br />( கரு + கணை , இங்கே கணை என்று நான் சொல்லவருவது தமிழ்ச்சொற்கணைகள் )<br /><br />அப்ப யாரு ? ? ? ? ?<br /><br />நண்பர்களே! <br />எனக்கு தமிழ் என்ற கடலுக்குள் தத்தளித்து முக்குளித்து முத்தெடுத்து மாலை தொடுக்க தெரியாது தான்....... <br /> <br />ஆனாலும்..... ஏதோ......<br /><br />தத்தளித்து முக்குளிக்கின்ற தமிழை தத்தெடுத்து வளர்த்து அதற்கு மாலை அணிய விரும்பும் தமிழர்களில் ஒருவன் தான் நானும்......<br /><br />என் கண்மணிகளே !<br />என் கண் மணியின் உதவியோடு பாதுகாக்கப்பட்ட விம்பங்களின் பிரதிபலிப்பைக் கொண்ட என் <br />கன்னி முயற்சிதான் இது...... நண்பர்களே ! நீங்க<br />தண்ணி ஊத்தி வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை<br />கண்ணி வைத்து விடாதீர்கள் இந்த கருணையூரானுக்கு..........<br /><br />ஒரே தடவையில் அடுத்தடுத்து என் சொற்கணைகளை பதிவுகளாக ஏவி உங்களை<br />நானும் கஷ்ரப்படுத்த விரும்பவில்லை ஏதோ என்னால் முடிந்தளவு வாரம் ஓரிரு பதிவுகளோடு விரைவில் சந்திப்போம்........<br />என் பதிவுகளின் வகைப்படுத்தல்கள் <br />"மின்னாத இடிகள்"<br />"முகவரியிடா மடல்கள்"<br />"உறங்காத இரவுகளில்...."<br />"......................................."<br />"......................................."<br /><br />நான் இதை ஆரம்பித்தது என் ஆசையோ இல்லை பேராசையோ எனக்கும் புரியவில்லை...<br />ஏதோ என் பதிவுகள் உங்கள் இதயத்தை தொட்டுச்சென்றால் நீங்களும் விட்டுச்செல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை..........நலம் பெற வாழ்த்துக்களோடு நன்றிகளும் கூட.......<br /><br /> <strong></strong><strong></strong>கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com10