( ஐப்பசி 2007 - வைகாசி 2009) போட்ட என் உள்ளத்து உணர்வுகள் சிலவற்றை இந்த பதிவினூடாக தருகின்றேன். உங்கள் பொன்னான நேரத்தை என் இந்த சிறிய பதிவிலே செலவிட்டமைக்கு ஆரம்பத்திலே நன்றியை சொல்லிவிடுறேன். நன்றி சொல்லிடானே என்று மூடாமல் கீழ இழுங்கோ.....
இவை அக்காலத்திற்கு ஏற்றவாறு எழுதப்பட்டது . இக்காலத்தோடு ஒப்பிட்டு பாக்காதீங்க.தப்பாக இருந்தால் மன்னித்துவிடுங்க் பதிவுலகத்தில் தவழ்ந்துகொண்டிருக்கும் இக் கருணைக் குழந்தையை.......

1)
உன் கோலங்கள் மாறினாலும் கொள்கைகள் மாறினாலும் காலன் வரும் வரை காலம் உன்னை காப்பாற்றும்........
வாயால் மட்டும் வெட்டி விளாசும் ஒரு நண்பனுக்காக எழுதப்பட்டது
2)
நான் ஒரு கோழை உன் வாய் முன்னாடி........
ஆனால்
உன்னைப்போல் கோழை இல்லை நாய் முன்னாடி.........
நான் வீரன் என் தாய் முன்னாடி .........
ஆனால்
உன்னைப்போல் வீரன் இல்லை பொய் முன்னாடி .........
3)
கருணையும் நிதியும் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் இன்று புரிந்துகொண்டேன் உன்னிடம் இருப்பது கருணையல்ல நிதி மட்டுமே என்று.......(புரியுது தானே யாருக்கு எண்டு)
4)
ஏய் ! 2008 போறியா நீ ? உனக்கென்று தந்தனுப்ப எனக்கென்று எதுவுமில்லை...
உன் தங்கை 2009 இடம் கொடுத்துவிடுகிறேன் எனக்கு விடிவு கிடைத்தால்.......
5)
+ , * எதுவும் இன்றி - இடமேயின்றி வாடும் உறவுகளை / துடிக்காதே ........
(விளங்காட்டி வெக்கப்படாம கேளுங்கோ)
இது "என்னுடைய சந்தேகம்" என்ற தலைப்பில் எழுதப்பட்டது
6)
பேய் கூட இப்போ அதிகமாக அலைகின்றது
அரைகுறையாக செல்லும் ஆத்மாக்களாலோ.............
நாய் கூட இப்போ நன்றியற்றதாக மாறுகின்றது
மனிதனோடு சேர்ந்து வாழ்வதனாலோ................
காய் கூட இப்போ வெம்பி விழுகின்றது
அதுவும் தன் இனப்பெருக்கத்தை வெறுப்பனாலோ..............
பாய் (தாயின்) கூட இப்போ அதிகமாக ஈரமாகிறது
பசியால் அழும் குழந்தையின் கண்ணீராலோ..............
தாய் கூட இப்போ தாலாட்ட மறக்கிறாள்
வடக்கில் வானிலிருந்து மழையாகப் பொழிவதனாலோ........
வாய் கூட இப்போ மூட மறுக்கின்றது
உயிர் எப்போதும் தன்னூடக போகலாம் என்று நினைக்கின்றதோ.......
பொய் கூட இப்போ உண்மையை சுடுகின்றது
இங்கே பொய் தான் வெல்லும் என்று அதற்கும் தெரிந்துவிட்டதோ..............
சேய் கூட இப்போ பால் குடிக்க மறுக்கின்றது
இரத்தவாடை பாலில் இருந்து வருகின்றது என நினைக்கின்றதோ......
நோய் கூட இப்போ அதிகமாக வருகின்றது
அதற்கும் இங்கே மருந்து இல்லை என்று தெரிந்து விட்டதோ.....
இது "எப்போது" என்ற தலைப்பில் எழுதப்பட்டது
7)
பச்சோந்தி தமிழன் இருக்கும் போது. . .
பசுமை வருவது எப்போது?
பொறாமைத்தமிழன் இருக்கும் போது. . .
பொற்காலம் வருவது எப்போது?
சுயநலம் பிடித்த தமிழன் இருக்கும் போது. . .
சுதந்திரம் வருவது எப்போது?
தமிழையே அழிக்கும் தமிழன் இருக்கும் போது. . .
தமிழர்க்கு தனிநாடு வருவது எப்போது?
பிரதேசவாதம் பேசும் தமிழன் இருக்கும் போது. . .
பிரிவு இல்லாமல் வாழ்வது எப்போது?
மனச்சாட்சி இல்லாத தமிழன் இருக்கும் போது. . .
மனம் திறந்து பேசுவது எப்போது?
எப்போது எப்போது என கேட்க வேண்டி இருக்கு. . .
எவனோ ஒருவன் அப்போது விட்ட தவறினால். . . .
இவை என் வாழ்க்கையை பிரதிபலிப்பவை ஆனால் எவ்வளவு தூரம் உண்மை என்று கேக்காதீங்க என்ன ...
8)
கடவுளே ! விதியை எழுதும்போது கிறுக்கிய அதை வெல்ல மதியை வைக்கும்போது சறுக்கிய நீயும் என் வாழ்க்கையில் ஒரு பொறுக்கிதான்......
இது "என்னைப்பற்றி" என்ற தலைப்பில் எழுதப்பட்டது
9)
பிறக்கும் போதே சாவின் விளிம்பு வரை சென்றவன் நான்.....
அதனாலோ ?....சாவை கண்டு பயப்படாதவனும் நான்.
கடவுள் எனக்கு தந்தது போதும் என நினைப்பவன் நான்...
அதனாலோ ?... கடவுளிடம் அதிகம் செல்லாதவன் நான்.
அனைவருக்கும் மனச்சாட்சி இருக்கு என நடப்பவன் நான்....
ஆனால் !...அனைவரிடமும் மனச்சாட்சி இருக்கு என நிருபிக்காதவனும் நான்.
தமிழை மிக மிக விரும்புபவன் நான்...
ஆனால் !...தமிழரை மிகவும் வெறுப்பவன் நான்.
என் குல தொழிலை வெறுத்தவன் நான்...
ஆனாலும்... என்னால் முடிந்தவரை என் குலத்தை பின்பற்றுபவன் நான்.
அமைதியனா வாழ்க்கையை விரும்புபவன் நான்...
அதனாலோ ?...அதிகம் அலட்டிக்கொள்ளாதவன் நான்..
நான் நான் என்று அதிகமாக பாவித்துவிட்டேனோ நான்....
...எனக்கும் நான் என்ற ஆணவம் இருப்பதனால் போல ?
மீண்டும் ஒரு பதிவு போட்டு உங்களுக்கு தொல்லை கொடுப்பேன். நன்றிகள்
அதுவும் தன் இனப்பெருக்கத்தை வெறுப்பனாலோ..............
பாய் (தாயின்) கூட இப்போ அதிகமாக ஈரமாகிறது
பசியால் அழும் குழந்தையின் கண்ணீராலோ..............
தாய் கூட இப்போ தாலாட்ட மறக்கிறாள்
வடக்கில் வானிலிருந்து மழையாகப் பொழிவதனாலோ........
வாய் கூட இப்போ மூட மறுக்கின்றது
உயிர் எப்போதும் தன்னூடக போகலாம் என்று நினைக்கின்றதோ.......
பொய் கூட இப்போ உண்மையை சுடுகின்றது
இங்கே பொய் தான் வெல்லும் என்று அதற்கும் தெரிந்துவிட்டதோ...........
சேய் கூட இப்போ பால் குடிக்க மறுக்கின்றது
இரத்தவாடை பாலில் இருந்து வருகின்றது என நினைக்கின்றதோ......
நோய் கூட இப்போ அதிகமாக வருகின்றது
அதற்கும் இங்கே மருந்து இல்லை என்று தெரிந்து விட்டதோ.....
இது "எப்போது" என்ற தலைப்பில் எழுதப்பட்டது
7)
பச்சோந்தி தமிழன் இருக்கும் போது. . .
பசுமை வருவது எப்போது?
பொறாமைத்தமிழன் இருக்கும் போது. . .
பொற்காலம் வருவது எப்போது?
சுயநலம் பிடித்த தமிழன் இருக்கும் போது. . .
சுதந்திரம் வருவது எப்போது?
தமிழையே அழிக்கும் தமிழன் இருக்கும் போது. . .
தமிழர்க்கு தனிநாடு வருவது எப்போது?
பிரதேசவாதம் பேசும் தமிழன் இருக்கும் போது. . .
பிரிவு இல்லாமல் வாழ்வது எப்போது?
மனச்சாட்சி இல்லாத தமிழன் இருக்கும் போது. . .
மனம் திறந்து பேசுவது எப்போது?
எப்போது எப்போது என கேட்க வேண்டி இருக்கு. . .
எவனோ ஒருவன் அப்போது விட்ட தவறினால். . . .
இவை என் வாழ்க்கையை பிரதிபலிப்பவை ஆனால் எவ்வளவு தூரம் உண்மை என்று கேக்காதீங்க என்ன ...
8)
கடவுளே ! விதியை எழுதும்போது கிறுக்கிய அதை வெல்ல மதியை வைக்கும்போது சறுக்கிய நீயும் என் வாழ்க்கையில் ஒரு பொறுக்கிதான்......
இது "என்னைப்பற்றி" என்ற தலைப்பில் எழுதப்பட்டது
9)
பிறக்கும் போதே சாவின் விளிம்பு வரை சென்றவன் நான்.....
அதனாலோ ?....சாவை கண்டு பயப்படாதவனும் நான்.
கடவுள் எனக்கு தந்தது போதும் என நினைப்பவன் நான்...
அதனாலோ ?... கடவுளிடம் அதிகம் செல்லாதவன் நான்.
அனைவருக்கும் மனச்சாட்சி இருக்கு என நடப்பவன் நான்....
ஆனால் !...அனைவரிடமும் மனச்சாட்சி இருக்கு என நிருபிக்காதவனும் நான்.
தமிழை மிக மிக விரும்புபவன் நான்...
ஆனால் !...தமிழரை மிகவும் வெறுப்பவன் நான்.
என் குல தொழிலை வெறுத்தவன் நான்...
ஆனாலும்... என்னால் முடிந்தவரை என் குலத்தை பின்பற்றுபவன் நான்.
அமைதியனா வாழ்க்கையை விரும்புபவன் நான்...
அதனாலோ ?...அதிகம் அலட்டிக்கொள்ளாதவன் நான்..
நான் நான் என்று அதிகமாக பாவித்துவிட்டேனோ நான்....
...எனக்கும் நான் என்ற ஆணவம் இருப்பதனால் போல ?
மீண்டும் ஒரு பதிவு போட்டு உங்களுக்கு தொல்லை கொடுப்பேன். நன்றிகள்