Tuesday, January 19, 2010

இவைகளுக்கும் பேச தெரிந்தால் இப்படிதான் பேசுமா..........

நண்பர்களே மீண்டும் ஒரு முறை கருணையூரானின் வணக்கம் . நீங்கள் எல்லாம் நன்றாக பேசுவிங்க, நன்றாக வாதிடுவிங்க , நன்றாக சிரிப்பிங்க . ஆனால் உயிரற்ற சில பொருட்கள் மற்றும் சில உணர்சிகள் பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா . கீழே வாசித்து பாருங்கள் . சற்று ஆழமாக சிந்தியுங்கள்.





முதலாவதாக காதல் , காமம் இரண்டும் சந்தித்து பேசினால் எவ்வாறு இருக்கும்

காதல் :- ஏய் காமம் ! எதற்காக நான் இருக்கும் இடமெல்லாம் நீயும் வருகின்றாய். உனக்கு வெட்கம் இல்லையா ?

காமம்:- ( சற்று கோபத்துடன்) நான் இல்லாமல் நீ தனித்து வாழ முடியுமா ? நான் வந்திருக்காவிட்டால் நீ வந்திருப்பியா ? ஆனால் நீ இல்லாமலும் நான் வாழ்வேன்

காதல் :-நீயும் ஒரு கொல்லாமல் கொல்லும் சர்வாதிகாரிதான் .என் இடத்தினுள் புகுந்த நீ இப்போ " நட்பு " என்று பல இடங்களில் புகுந்து விட்டாயே

காமம்:- ( ஆணவச் சிரிப்புடன் ) நான் கத்தரிக்காயிலும் இருப்பேன் புடலங்காயிலும் இருப்பேன் நீ யார் கேட்பதற்கு ?

பின்னை பாருங்கோவன்





அடுத்ததாக நட்பு , காதல் , காமம் , கல்யாணம் , மரணம் இவைகளின் ஒரு திருவிளையாடல் எப்படி இருக்கு என்று பாருங்கள்

நட்பு ஒரு இடத்தில் நீண்ட காலமாக குடிகொண்டிருந்தது. அந்த வழியால் வந்த காதல் நட்பு இருந்த இடத்திற்கு சென்றது :-

காதல் :- நட்பே நட்பே ! சிறிது காலம் உன் வீட்டில் இருந்து விட்டு போகலாமா ?

நட்பு :- அதுக்கென்ன , அந்த மூலையில் சற்று இருந்து விட்டு செல்.

அந்த வழியால் வந்த காமம் இதனை அறிந்து நட்பின் இடத்துக்கு சென்றது

காமம் :- நட்பே நட்பே ! சற்று களைப்பாக இருக்கிறது .சற்று இருந்து விட்டு செல்லலாமா ?

நட்பு :- அதுக்கென்ன மற்ற மூலையிலே சற்று இருந்து விட்டு செல்

மீண்டும் செல்லாமல் அவ்வாறே குடிகொண்டன காதலும் காமமும் . பல காலம் சென்ற பின் கல்யாணம் அங்கு புகுந்து கேட்டது

கல்யாணம் :- நானும் இங்கு வந்து இருக்கலாமா ? அப்படி என்றால் யாரை கேட்க வேணும்

காமம் :- நான் தானே இப்படி ஒரு இடம் இருக்கு . இங்கே வந்தால் இருக்கலாம் என்று கூறினனே

காதல் :- இல்லை இல்லை என்னை தான் கேக்கணும். நான் தான் இங்கே பெரிய ஆள்

நட்பு :- ஐயோ என்ர ஐயோ என் வீட்டுக்குள் வந்தே என்னையே மறந்திட்டிங்க. எனக்கு ஒரு மூலை இடம் தாங்க நான் இருந்திட்டு போகிறேன்

இவர்களின் சத்தத்தை வீதியால் சென்றுகொண்டிருந்த மரணத்துக்கு கேட்டுவிட்டது.அங்கே வந்த மரணம்

மரணம் :- யார் எல்லாம் நீங்கள் , இவை எல்லாம் எனக்கு சொந்தமான இடங்கள் .நீங்கள் எல்லாரும் வந்தேறியகுடிகள் தான் .புறப்படுங்கள்







அடுத்ததாக கடவுளிடம் ஒரு மனிதன் பேசுகின்றான்

மனிதன் :- கடவுளே !

பூவுக்குள் தேனை வைத்தாய்
அதை தேனீக்கு சொல்லி வைத்தாய்......

கல்லுக்குள் ஈரத்தை வைத்தாய்
அதை தேரைக்கு சொல்லி வைத்தாய்......

சிற்பிக்குள் முத்தை வைத்தாய்
அதை மனிதனுக்கு சொல்லி வைத்தாய்......

என்னுள் என்ன வைத்தாய்
அதை யாருக்கும் சொல்லி வைக்கும் அளவுக்கு......

கடவுள் :- ( சிரித்தவாறே ) தேனீயோ தேரையோ எல்லாம் தேடல் மூலம் தான் கண்டுபிடித்தன .நீயும் உன்னுள் இருப்பதை முதலில் தேடு வாழ்வில் வெற்றி பெறுவாய்

மனிதன் :- தேடல் மூலம் நூற்றெட்டு கடவுளை கண்டுபிடித்து இவ்வாறு கேட்டு அலுத்துவிட்டேன் . இன்னும் தேடல் தான் என் வாழ்க்கை என்றால் இன்றிலிருந்து மரணத்தையே தேடுகின்றேன்

கடவுள் :- ( நக்கல் சிரிப்புடன் ) மரணத்தை நீ தேட தேவை இல்லை அது தானாக தேடி வரும் .





அடுத்ததாக நிலாவும் மனிதனும் பேசுகின்றார்கள்


மனிதன் :- நிலாவே ! இவ்வளவு அழகாக இருக்கின்ற நீ எதற்காக அழுக்கு நிறைந்த பூமியை காதலித்து சுற்றிக்கொண்டிருக்கின்றாய்

நிலா :- இல்லை இல்லை நீ இங்கே வந்து பார் எவ்வளவு அழகாக இருக்கிறதே பூமி அதுதான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்

மனிதன்:- ஓகோ அப்படியா ! வேண்டாம் நான் அங்கு வந்தால் உன் மீது நான் கொண்ட காதலும் வெறுப்படையலாம் . நானும் இங்கிருந்தே உன்னை காதலிக்கின்றேன்

14 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

சிந்திக்க வேண்டிய விடயங்கள் தான் & உண்மை தான்
இன்று நட்பு செத்துக்கொண்டிருக்கின்றது காதலாலும் காமத்தாலும்.

தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்துக்களை தொடர்வோம் நாங்கள்

Bavan said...

மிகவும் இரசித்தேன் அழகாக எழுதியுள்ளீர்கள்...

காதல், காமம், நட்பு, மரணம், நிலவு, கடவுள், இவர்கள் இப்படிப்பேசிக்கொண்டால்.. அடடா என்ன ஒரு கற்பனை..

தொடர்ந்து கலக்குங்கள்...;)

Sinthu said...

அடேங்கப்பா என்ன கற்பனை, அசத்திறீங்க அண்ணா.... வாழ்த்துக்கள்
நட்பு காதலாக மாறுவது தான் இப்போது சகஜமாகிவிட்டதே, மாற்ற முடியும் என்று நினைக்கிறீங்களா?
lolz....

Anonymous said...

என்ன ஒரு கற்பனை வளம் கருனையூரானுக்கு !!!
மனித வாழ்கையில் கலந்துவிட்ட உணர்வுகளுக்கு இடையிலான உரையாடல் அற்புதம் ..
இதில் அன்பு,பாசம் இவற்றையும் இணைத்து இருக்கலாம் ..

"என்னுள் என்ன வைத்தாய்
அதை யாருக்கும் சொல்லி வைக்கும் அளவுக்கு......"
உன்னில் இருப்பதை நீ தொடர்ந்து தேடு அதுவே உன்னை பலபேர் தேட வைக்கும் .....

கருணையூரான் said...

ஜோ.சம்யுக்தா கீர்த்தி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்

கருணையூரான் said...

பவான் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களிற்கு நன்றிகள்

கருணையூரான் said...

சிந்து நன்றிகள் ..
அதை மாற்ற முடியாது தான் ஆனால் நட்பா காதலா என்று தெரியாம இருப்பவற்றை நிச்சயமாக மாற்றவேண்டும்
அதாவது ஏதாவது ஒன்று இருந்தால் சரி

கருணையூரான் said...

பெயர் இல்லாமல் அடித்தவரே பெயரோடு அடித்தால் நன்றாக இருக்கும்
நன்றிகள்
அன்பு பாசத்தை வைத்து இதனுள் சேர்க்க முடியாமல் போய்விட்டது ஆனால் அன்பு காதல் என்ற அடிப்படையிலும் வரும்தானே

அப்படியா நன்றிகள்

Anonymous said...

plz update in yaal thevi

கருணையூரான் said...

உங்கள் கருத்துக்கு நன்றிகள்
அதில் இணைவதற்கு வேண்டுகோள் விடுத்தேன் ஆனால் அதை இன்னும் கணக்கு எடுக்கவில்லை

Ashwin-WIN said...

என்ன ஒரு கற்பனை..ஆஹா பதிவிலே நேரடியாக எழுதமுடியாத பல சூட்சுமங்களை உங்கள் பாத்திரங்களூடு சொல்லியிருகிரியல்.. தொடர்க அன்பரே..

கருணையூரான் said...

Ashwin-WIN நன்றிகள் .... ///பதிவிலே நேரடியாக எழுதமுடியாத பல சூட்சுமங்களை உங்கள் பாத்திரங்களூடு சொல்லியிருகிரியல்./// ம்...உங்களிற்கு புரிந்துவிட்டது ..நல்ல விசயம்

வடலியூரான் said...

கருணையூரான் நல்லதொரு கற்பனை மிகுந்த அற்புதப் பதிவு எனக்கு அதிலும் அந்த கடவுளிடன் பேசும் மனிதனின் கவிதை மிக நன்றாக் உள்ளது. மற்றைய அனைத்தும் நன்றாகவே உள்ளது.மற்ற பதிவர்களைப் போல் அரைத்த் மாவையே திருப்பி அரைக்காமல் உங்களூக்கென்று தனி வழியமைத்துச் செல்லும் கருணாஇயூரானே உங்கள் பயணம் வெற்றி பெற இந்த வடலியூரானின் வாழ்த்துக்கள்

கருணையூரான் said...

வடலியூரான் உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் ....

Post a Comment